Header Ads



பேஸ்புக் விருந்தில் போதைவஸ்து - அநாகரிகமாக நடந்த 9 பேர் கைது

போதை வஸ்துக்களை பயன்படுத்தி பேஸ்புக் நண்பர்கள் சிலர் தங்காலையில் உள்ள சுற்றுலா ஹொட்டல் ஒன்றில் நடத்திய விருந்துபசாரத்தை சுற்றிவளைத்த தங்காலை பொலிஸார், போதை வஸ்த்தை பயன்படுத்தி அநாகரிகமாக நடந்துக்கொண்ட சில இளைஞர்களை கைது செய்துள்ளனர்.

தங்காலை பொலிஸ் அத்தியட்சகர் லக்சிறி கீதாலுக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து, அவரது உத்தரவின் போரில் தங்காலை தலைமையக பொலிஸ் நிலையத்தின் அதிகாரிகளுடன், வீரகெட்டிய மற்றும் பெலியத்தை பொலிஸார் இணைந்து இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.

நாட்டில் பல இடங்களில் இருந்து வந்து விருந்தில் கலந்துக்கொண்ட 5 யுவதிகள் மற்றும் நான்கு இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். 16, 17 மற்றும் 18 வயதான இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

விருந்துக்கு பயன்படுத்தப்பட்ட ஒலிப்பெருக்கிகள் மற்றும் போதை வஸ்துக்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கைது செய்யப்பட்ட இளைஞர், யுவதிகள் பொதுமக்களுக்கு தொந்தரவை ஏற்படுத்தும் வகையில் அநாகரிகமாக நடந்துக்கொண்ட குற்றச்சாட்டில் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளனர்.

No comments

Powered by Blogger.