Header Ads



குவைத்தில் துன்பங்களை எதிர்கொண்ட 57 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

தொழில் நிமித்தம் குவைத்துக்குச் சென்று, அங்கு பல்வேறு இன்னல்கள், மற்றும் துன்புறுத்தல்களுக்கு ஆளான, இலங்கைப் பணியாளர்கள் 57 பேர், அந்நாட்டிலிருந்து, இன்று (01) காலை நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

இவர்களிடையே, 9 ஆண்களும், 48 பெண்களும் உள்ளனர். இவர்கள், இலங்கையின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

குவைத்திலுள்ள, இலங்கை தூதரகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களே, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தால் இவ்வாறு நாட்டுக்கு  அழைத்துவரப்பட்டுள்ளனர்.

இவர்கள் தத்தமது வீடுகளுக்குச் செல்வதற்கான கொடுப்பனவுகளை, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வழங்கியுள்ளது.

டீ.கே.ஜீ. கபில

No comments

Powered by Blogger.