Header Ads



பள்ளிவாசலுக்கு பின்புறம் செல்போன்களை, எரியூட்டிய 3 பேர் கைது

பொத்துவில் பொலிஸ் பிரிவில் பல்ஹான் பள்ளி வீதியில் பாக்கியவத்தை முஸ்லிம் பள்ளிவாசலுக்கு பின்புறம் இன்று -27- மதியம் 12 மணியளவில் 20 செல்போன்களை எரியூட்டி அழித்த சம்பவம் தொடர்பாக மூன்று பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பள்ளிவாசலின் தலைவர் உட்பட மூன்று பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொத்துவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொத்துவில் பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து அருகம்பை விசேட அதிரடிப்படை முகாம் படையினருடன் இணைந்து நடத்திய தேடுதலில் எரியூட்டப்பட்ட செல்போன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த செல்போன்களுடன் சந்தேக நபர்கள் பொத்துவில் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளனர்.

No comments

Powered by Blogger.