Header Ads



முஸ்லிம் அரசியல்வாதிகள் 2 பேர் கைதுசெய்யப்படுவார்களா..? ஜனாதிபதியிடம் அனுமதி கிடைக்கவில்லை


-Tn-

தமது அமைப்புடன் தொடர்பில் இருந்த அரசியல்வாதிகளின் விபரங்களை, கைது செய்யப்பட்டுள்ளவர்கள் கூறியதால்  (1) முக்கிய அரசியல்வாதி ஒருவரும், (2) அரசியல்வாதி ஒருவரும் விசாரணைக்கு உட்படுத்தப்படலாம் எனச் சொல்லப்படுகிறது.

அவர்களை விசாரணை செய்வதற்கு உயர்மட்ட பாதுகாப்பது தரப்பு ஜனாதிபதியிடம் அனுமதி கோரியிருக்கிறது .அதற்கு ஜனாதிபதி தரப்பிடம் இருந்து இன்னும் அனுமதி கிடைக்கவில்லையென தெரியவருகிறது.

இதேவேளை தாக்குதல்தாரிகள் ஒளிப்பதிவு செய்ததாக கூறப்படும் வீடியோ இலங்கையில் இருந்து பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறியக் கிடைத்துள்ளதால் அது குறித்தும் தனி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பொலிஸ் விசாரணைகளில் தெரியவரும் விடயங்கள் வெளியில் சென்றால் இதனுடன் தொடர்புபட்டவர்கள் தப்பிக்கும் வாய்ப்பு இருக்குமெனத் தெரிவித்து பொலிஸார் மிகுந்த இரகசியம் காப்பதாக தெரிகிறது.இந்த சம்பவங்கள் நடந்த பிறகு சமூக ஊடகங்களில் தமது கணக்குகளை முடக்கியவர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் குறித்து விசாரணைகள் நடக்கின்றன.

அமெரிக்க மற்றும் பிரிட்டனின் பாதுகாப்பு நிபுணர்கள் நாளை கொழும்பு வருவதால் இனிமேல் விசாரணைகள் விஞ்ஞானபூர்வமாக நடக்குமென தெரிவிக்கப்படுகிறது

No comments

Powered by Blogger.