Header Ads



2 பெண்கள் உள்ளிட்ட 5 பேர் கைது

பொலிஸாரின் கட்டளையை மீறி பயணித்த வாகனம் ஒன்றுடன் அதில் பயணித்த இரண்டு பெண்கள் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளர்.

தங்காளை தலைமையக பொலிஸ் அதிகாரிகளால் நேற்று இரவு இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்டவர்கள் அளுத்கம, தர்காநகர் மற்றும் கலமுனை மருதமுனை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர். 

தங்காளை நகரத்தின் பாலத்தில் வீதித் தடை ஏற்படுத்தி சோதனை செய்யப்படும் போது பொலிஸாரின் கட்டளையை மீறி வாகனம் சென்றுள்ளது. 

இதனையடுத்து பொலிஸார் குறித்த வேனை துரத்திச் சென்று பிடித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.