Header Ads



மறப்போம், மன்னிப்போம் என்ற பேச்சுக்கே இடமில்லை - சார்ல்ஸ் நிர்மலநாதன் Mp

யுத்த குற்ற உண்மைகள் கண்டறியப்பட்டு  வெளிப்படுத்தப்படும் வரையில் மறப்போம் மன்னிப்போம் என்ற பேச்சுக்கே இடமில்லை எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன், குற்றங்களை மூடி மறைந்து நல்லிணக்கதை எட்ட முடியாது. சர்வதேச தலையீட்டில் தீர்வுகள் வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற டிஜிட்டல் உட்கட்டமைப்பு,வசதிகள் மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சு ,விஞ்ஞானம் ,தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி  அமைச்சு, பொது தொழில் முயற்சி ,கண்டிய மரபுரிமை மற்றும் கண்டிய அபிவிருத்தி அமைச்சு ஆகியவற்றின் மீதான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

மக்கள் விரும்பும் அரசாங்கமொன்று அமைய வேண்டுமானால் இலத்திரனியல் வாக்களிப்பு முறையை அறிமுகப்படுத்த வேண்டும் எனவும் ஸ்மார்ட் வகுப்பறைகளை கிராமப்புற பாடசாலைகளிலும் அமைப்பதன் மூலம் அந்த மாணவர்கள் இலகுவாக தமது கணினி அறிவை வளர்த்துக்கொள்ள முடியும் எனவும் குறிப்பிட்டார். 

1 comment:

  1. முதல்ல உன்னை பயங்கரவாத தடை சட்டத்தில் கைது செய்ய வேண்டும். கிருஸ்துவ பயங்கரவாதி

    ReplyDelete

Powered by Blogger.