Header Ads



JVP யின் உதவியுடன் மகிந்தவை, பொது வேட்பாளராக்குவதே எனது எதிர்பார்ப்பு

மக்கள் விடுதலை முன்னணியின் உதவியுடன் மகிந்த ராஜபக்சவை பொது வேட்பாளராக கொண்டு வருவதே தனது எதிர்பார்ப்பு என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

எனினும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் இன்னும் தெரிவு செய்யப்படவில்லை.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எந்த தேர்தலை சந்திக்கவும் தயாராக இருக்கின்றது எனவும் குமார வெல்கம குறிப்பிட்டுள்ளார்.

மகிந்த ராஜபக்சவின் தீவிர ஆதரவாளரான குமார வெல்கம, கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட கூடாது என கடுமையாக வலியுறுத்தி வருகிறார்.

ஜனநாயக தலைவரே நாட்டின் தலைவராக தெரிவு செய்யப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தி வருகிறார்.

No comments

Powered by Blogger.