Header Ads



தீக்குளித்த CTB ஊழியர்

பிட்டகோட்டேயில் உள்ள தேசிய சேவை சங்கத்தின் தலைமையகத்திற்கு முன்னால் நபர் ஒருவர் தனக்குத் தானே தீ வைத்துக் கொண்டுள்ளார். 

குறித்த தலைமையகத்திற்கு முன்னாள் இடம்பெற்ற எதிரப்பு நடவடிக்கையின் போது குறித்த நபர் தீ வைத்துக் கொண்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் கூறியுள்ளது. 

குறித்த நபர் இலங்கை போக்குவரத்து சபையில் பணியாற்றக் கூடியவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறித்த நபர் சிகிச்சைக்காக களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள போதிலும், அவரின் நிலமை கவலைக்கிடமானது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

1 comment:

  1. இறைவன் தந்த உயிரை இறைவனே மீண்டும் எடுத்துகொள்ளும் வரை மனிதன் மாய்த்துகொள்ள முற்படுவது பாவம் என்று சொல்லப்பட்டுள்ளது, மானிடனை இறைவனே பாதுகாப்பானாக

    ReplyDelete

Powered by Blogger.