Header Ads



சுதந்திரக் கட்சியினர் வீடுகளை ஒப்படைக்கவில்லை - வீடுகளின்றி அமைச்சர்கள் அங்கலாய்ப்பு

தற்போதைய அரசாங்கத்தின் சில அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்களுக்கான உத்தியோகப்பூர்வ வீடுகள் இதுவரை கிடைக்கப் பெறவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த தேசிய அரசாங்கத்தில் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், இராஜாங்க அமைச்சராக பதவி  வகித்த ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்கள் குறித்த உத்தியோகப்பூர்வ வீடுகளை இதுவரை கையளிக்காமையே இதற்கான காரணமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய அமைச்சர் பழனி திகாம்பரம், லக்கி ஜயவர்தன, ரஞ்சித் மத்தும பண்டார உள்ளிட்ட பலருக்கே இன்னும் உத்தியோகப்பூ​ர்வ வீடுகள் கிடைக்கவில்லையென அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார  தெரிவித்துள்ளார்.

எனவே குறித்த வீடுகளை ஒப்படைக்குமாறு ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்களுக்கு பல தடவைகள் கடிதம் மூலம் அறிவித்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.