Header Ads



யார் ஜீ பும்பா..? யார் பும்மா..??

கஞ்சிப்பான இம்ரானின் சகாக்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர் அல்லவா ?அவர்களிடம் இருந்தும் பல முக்கிய தகவல்கள் கிடைத்தவண்ணம் இருப்பதாக பொலிஸ் சொல்கிறது...

யார் ஜீ பும்பா ? யார் பும்மா ?

கொழும்பு பாதாள உலக கோஷ்டியில் இரண்டு புள்ளிகள் இருக்கின்றனர்... ஒருவர் பும்மா எனப்படும் கெனடி... புலிகள் இயக்கத்தில் இருந்த அவர் குறி பார்த்து சுடுவதில் விற்பன்னர்.. அவர் குறி தப்பியதே இல்லை... கொழும்பு மாநகர சபை உறுப்பினர் கிருஷ்ணாவை சுட்டவர் இவரென சொல்லப்படுகிறது.

அந்த சம்பவத்துக்கு பிறகு இவர் இந்தியாவுக்கு தப்பியோடிவிட்டதாக பொலிஸ் 
சொல்கிறது. 

மாக்கந்துர மதுஷின் நண்பரான இவர், சுடுவதை மட்டும் ஒரு தொழிலாக செய்து வந்திருக்கிறார். 

போதைப்பொருள் விற்பனையில் அவர் ஈடுபட்டதில்லையாம். சரியாக சுட்டு கேமை முடிப்பது- அதற்கு உரிய பணத்தை வாங்குவது மட்டுமே அவர் வேலை...

மற்றவர் ஜீ பும்பா.. 

கஞ்சிப்பான இம்ரானின் சகா. கொச்சிக்கடை குடுசெல்வியின் 
வலதுகை. 

குடு சூட்டியை அண்மையில் சுட்டவர் இவர்தான்... அதேபோல் ஹேகித்தயில் அண்மையில் இரு இளைஞர்களை வேனில் வழிமறித்து சுட்டுத்தள்ளியதிலும் பும்பாவுக்கு பங்குண்டு. 

இவரையே சில தினங்களுக்கு முன்னர் கம்பளையில் வைத்து கைது செய்தது எஸ் ரீ எவ்..

ஜீ பும்பாவை கைது செய்துள்ள பொலிஸ், பும்மாவுக்கும் வலை வீசியுள்ளது...

_Sivaraja-

No comments

Powered by Blogger.