ஜப்பானில் இடம்பெற்ற விபத்தில், இலங்கை மாணவர் மரணம்
ஜப்பானில் இடம்பெற்ற விபத்தில் இலங்கை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஜப்பானில், Utsunomiya orion கல்லூரியில் கல்வி கற்றுவந்த இலங்கை மாணவர் ஒருவர் நேற்று -25- காலை இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்துள்ளார்.
அவர் ஓட்டிய மோட்டார் வாகனம், வாகனமொன்றுடன் மோதியமையினால் குறுித்த விபத்து நிகழ்ந்துள்ளது.
உயிரிழந்த மாணவன், கம்பஹா - கடவத்தை பிரதேசத்தை சேர்ந்த இசுரு அபேதிர என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
Post a Comment