Header Ads



நியூசிலாந்து தாக்குதலுக்கு பழிவாங்க பாகிஸ்தானில், தேவாலயம் எரிக்கப்பட்டது என பொய் வதந்தி

-BBC-

 கடந்த வெள்ளிக்கிழமை நியூசிலாந்திலுள்ள இரண்டு மசூதிகளில் நடைபெற்ற துப்பாக்கி தாக்குதலுக்கு பதிலடி வழங்கும் வகையில், பாகிஸ்தானில் இஸ்லாமியவாதிகள் தேவாலயம் ஒன்றைத் தீயிட்டு கொளுத்தியதாக சமூக ஊடகங்களில் செய்தி வைரலாக பரவி வருகிறது.

வெள்ளையின மேலாதிக்கவாத ஆஸ்திரேலியர் ஒருவர் இரண்டு மசூதிகளில் தொழுகை செய்த 50 முஸ்லிம்களை துப்பாக்கியால் சுட்டு கொன்றதோடு, அந்த கொடூரத்தை சமூக ஊடகங்களில் நேரலையில் ஒளிபரப்பினார்.

இதற்குப் பதிலாக நடத்தப்பட்டதாக கூறி பகிரப்படும் 'தேவாலய எரிப்புக் காணொளி'யில் முக்கிய கட்டடத்தில் சிலர் ஏறுவது தெரிவதோடு, காணெளியின் முடிவில் கிறிஸ்தவ அடையாளப் பொருளொன்றை அவர்கள் உடைப்பதும் தெரிகிறது.

மக்கள் கத்துவதையும் இந்த காணொயில் கேட்க முடிகிறது. இதன் ஒரு பகுதியில். இந்த தேவாலயத்தை சுற்றி புகையையும் காண முடிகிறது.

ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் இது பகிரப்படும் நிலையில், பிபிசியின் வாட்ஸாப் வாசகர்கள், இந்த காணொளியின் உண்மை தன்மையை கண்டறிய அதனை எமக்கு அனுப்பியுள்ளனர்.

பிபிசி இது பற்றி ஏன் செய்தி வெளியிடவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ள லண்டனிலுள்ள ட்விட்டர் பயனர் ஒருவர் ("@TheaDickinson,") இந்த காணொளியையும் அனுப்பியுள்ளார்.

ஆனால், நியூசிலாந்து தாக்குதலுக்கு பதிலடி வழங்கும் வகையில், பாகிஸ்தானில் தேவாலயம் கொளுத்தப்பட்டதாக பரவி வரும் செய்தி பொய் என்பதை நாங்கள் கண்டறிந்துள்ளோம்.

காணொளி பாகிஸ்தானை சேர்ந்தது அல்ல

நியூசிலாந்தில் தாக்குதல் நடைபெற்ற அல் நூர் மற்றும் லின்வுட் மசூதிகளில் சுமார் 50 பேர் கொல்லப்பட்டனர். 50க்கு மேலானோர் காயமடைந்தனர்.

இந்த சம்பவத்தை "பயங்கரவாத தாக்குதல்" என்று தெரிவித்திருக்கும் நியூசிலாந்து பிரதமர் ஜெசின்டா அர்டர்ன், நாட்டிற்கு இதுவொரு "கறுப்பு தினம்" என்று கூறியுள்ளார்.

அதிகமானோர் கொல்லப்பட்ட இந்த தாக்குதலுக்கு பழிவாங்கப்பட்டதாக கூறி, அதற்கு சான்றாக 30 வினாடிகளே இருக்கும் இந்த 'தேவாலய எரிப்பு' காணொளி பகிரப்படுகிறது.

ஆனால், இந்த காணொளி தோன்றிய இடத்தை தேடியதில் இது பாகிஸ்தானை சேர்ந்ததல்ல. எகிப்தை சேர்ந்தது என்பது தெரிய வந்தது. இந்த காணொளி 2013ம் ஆண்டு எடுக்கப்பட்டுள்ளது. BBC

No comments

Powered by Blogger.