Header Ads



மதூஷை கைது செய்வதை தடுக்குமாறு, தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிப்பு

டுபாயில் கைது செய்யப்பட்டுள்ள பாதாள உலக தலைவன் மாகந்துர மதூஷை கைது செய்வதை தடுக்குமாறு இடைக்கால தடை உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. 

மாகந்துர மதூஷின் தாயின் சகோதரியான. சூரியவெவ பகுதியை சேர்ந்த ஏ.டபிள்யூ சிறியானி என்பவரே குறித்த மனுவை தாக்கல் செய்திருந்தார். 

குறித்த மனுவின் பிரதிவாதிகளாக பொலிஸ் விஷேட அதிரடிப்படையின் பிரதி பொலிஸ் மா அதிபர், பொலிஸ் மா அதிபர் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்பு பிரிவின் நிலையப்பொறுப்பதிகாரி உட்பட ஐவரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தற்போது வெளிநாட்டில் உள்ள மாகந்துர மதூஷ் என்பவரை கைது செய்வதற்கு பொலிஸார் அடிப்படையற்ற விதத்தில் செயற்படுவதாக மனுதாரர் குறிப்பிட்டிருந்தார். 

இதன் காரணமாக அவரது அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாக தீர்ப்பளிக்குமாறும் மாகந்துர மதூஷை கைது செய்வதை தடுக்குமாறு தடை உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.