ஒசாமாவின் மகனை பற்றி, தகவல் தருவோருக்கு பரிசுத் தொகை அறிவிப்பு!
ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்சா பின்லேடனை பற்றி தகவல் தருவோருக்கு (இந்திய மதிப்பு) 7 கோடி ரூபாய் பரிசுத் தொகையை அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.
அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதலில் தொடர்புடைய பின்லேடன், அல் கொய்தா தீவிரவாத தலைவனாக செயல்பட்டு வந்தான். பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்ட பின் அல் கொய்தா இயக்கத்தின் தலைவராகும் முயற்சியில் அவரது மகன் ஹம்சா பின்லேடன் ஈடுபட்டுவந்தது தெரியவந்துள்ளது.
கடந்த 4 ஆண்டுகளாக ஆடியோ, வீடியோ வழியே அல்கொய்தா இயக்கத்தினரை தொடர்புகொண்டு, பின்லேடனை கொன்றதற்காக அமெரிக்கா மீது தாக்குதல்களை நடத்த வலியுறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
Vaandi eduththa seithiyo?
ReplyDeletemillions of muslims killed by USLeaders in line.. til today... so who is terrorist?
ReplyDelete