Header Ads



கிழக்கு மாகாணத்தில், இறைச்சி விற்பனையில் வீழ்ச்சி

கிழக்கு மாகாணத்தில் மாடுகளுக்கு அண்மைக் காலத்தில் தொற்றுநோய் பரவுவதாக வெளியான செய்தியையடுத்து, அம்பாறை மாவட்டத்தில் இறைச்சி விற்பனை கணிசமானளவு வீழ்ச்சி கண்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

அம்பாறை மாவட்டத்திலுள்ள மாடுகளின் தற்போதைய சுகாதார நிலை குறித்து சுகாதார திணைக்கள அதிகாரிகள் பொதுமக்களை தெளிவுபடுத்த வேண்டும் என கோரப்படுகின்றது.

அச்சம் காரணமாக மக்கள் இறைச்சி உணவை அதிகம் தவிர்த்து வருகின்றனர். தற்காலத்தில், அம்பாறை மாவட்டத்திலுள்ள அதிகமான இறைச்சிக் கடைகள், இறைச்சி விற்பனையின்றி நீண்ட நேரம் இரவுவரை திறந்து காணப்படுகின்றன. குறித்த சில இறைச்சி விற்பனை நிலையங்கள் திறக்கப்படாது மூடப்பட்டுள்ளன.

அத்துடன், உணவு விற்பனை நிலையங்கள், ஹோட்டல்கள், சிற்றுண்டிச் சாலைகள் என்பனவற்றில் இறைச்சி சேர்த்து தயாரிக்கப்படும் உணவுப் பண்டங்கள். சிற்றுண்டி வகையறாக்களின் விற்பனையும் தற்போது வீழ்ச்சி கண்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

ஐ.எல்.எம். றிஸான்

No comments

Powered by Blogger.