அதிர்ச்சி கொடுக்கவுள்ள, குமார வெல்கம
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம விரைவில் தீர்க்கமான அரசியல் தீர்மானமொன்றை எடுக்கவுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த முடிவு கொழும்பு அரசியலில் திருப்புமுனையாக அமையும் எனவும் கூறப்படுகின்றது. கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.
கோத்தபாய ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவதற்கு குமார வெல்கம கடந்த காலங்களில் வெளிப்படையாகவே எதிர்ப்பு வெளியிட்டிருந்தார்.
எனினும், இந்த எதிர்ப்பையும் மீறி கோத்தாவை களமிறக்கும் தீர்மானத்துக்கு ராஜபக்சக்கள் வந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த அறிவிப்பு வெளியான பின்னர், குமார வெல்கம, மகிந்த அணிக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் அரசியல் தீர்மானமொன்றை எடுப்பார் என அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றனர்.
“ஜனநாயகத் தலைவர் ஒருவரே நாட்டை ஆளவேண்டும். இராணுவத்தில் இருந்தவர்களுக்கு இடமளிக்கமுடியாது. தேசிய உடை அணிந்தவரே அதற்கு பொருத்தம்.” என்றெல்லாம் குமார வெல்கம கடந்த காலங்களில் கருத்து வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment