Header Ads



சிறையில் என்னை சித்திரவதை செய்கிறார்கள் - நியூசிலாந்து பயங்கரவாதி புலம்புகிறான்

நியூசிலாந்தின் Christchurch பகுதியில் நடந்த துப்பாக்கிசூட்டில் 50 பேரை சுட்டுக்கொலை செய்த குற்றவாளி Tarrant, தனக்கு சிறையில் சித்ரவதைகள் நடப்பதாக பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவை பிறப்பிடமாக கொண்ட 28 வயதான Tarrant, Paremoremo இல் ஆக்லாந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சிறையில் தன்னை தனிமைப்படுத்தி சித்ரவதை செய்வதாக புகார் ஒன்றை அளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சிறையில் தனிமைப்படுத்தப்பட்டு, பார்வையாளர்கள் யாரையும் பார்ப்பதற்கு அனுமதிக்கப்படுவதில்லை மற்றும் அவருக்கு எவ்வித தொலைபேசி அழைப்புகள் வந்தாலும் அவருக்கு அனுமதி வழங்குவதில்லை.

நியூசிலாந்தின் திருத்தங்கள் சட்டத்தின் படி, கைதிகள் வெளிநடப்பு தொலைபேசி அழைப்புகள், அஞ்சல், மருத்துவ சிகிச்சை, படுக்கை, உணவு மற்றும் பானம், பார்வையாளர்களை சந்தித்தல், கல்விக்கான அணுகல் மற்றும் பிற விஷயங்களைப் பெறுதல் ஆகியவற்றுக்கு உரிமை உண்டு.

சிறைச்சாலையில் அவசரநிலை இருந்தால் சிறைச்சாலை இந்த உரிமைகள் மறுக்கப்படலாம்,

சிறைச்சாலையில் காவலில் வைக்கப்பட்டுள்ள Tarrant 24 மணி நேரமும் சி.சி.டி.வி கமெராவில் கண்காணிக்கப்படுகிறார் என சிறைத்துறை தெரிவித்துள்ளது. அவர் சிறையில் இணக்கமானவராக இருந்தார் என சிறைத்துறை விளக்கம் அளித்துள்ளது.

1 comment:

  1. This message is just to cheat the world.....

    Torture ???... Let him see how a prisoners were tortured in Guantanamo.. just because they were Muslims.. no human right groups talk of it.

    You killed 50 people and still you wanted to have a entertaining life in prison ?

    ReplyDelete

Powered by Blogger.