Header Ads



ஜனாதிபதி செய்த, வேலையைப் பாருங்கள்


மேல் மாகாண முதலமைச்சர் மற்றும் சகாக்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிறையில் அடைத்த விநோத சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

மேல் மாகாண முதலமைச்சர் இசுரு தேவபிரிய மற்றும் மாகாண சபை உறுப்பினர் சுமித் விஜிதமுனி சொய்ஸா ஆகியோரை ஜனாதிபதி சிறையில் அடைத்துள்ளார்.

குறித்த இருவரையும் நேற்று ஜனாதிபதி கொஸ்கம சிறைச்சாலையில் அடைத்துள்ளார்.

கொஸ்கமயில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பொலிஸ் நிலையத்தை திறந்து வைக்கும் போது இந்த விநோத சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த இரு அரசியல்வாதிகளையும் நகைச்சுவைக்காக ஜனாதிபதி சிறைச்சாலையில் அடைத்து பார்த்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் ஜனாதிபதியின் ஊடக பிரிவில் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நேற்று இடம்பெற்றுள்ளது.

No comments

Powered by Blogger.