Header Ads



ரணிலின் பிறந்தநாள் பரிசாக,, சஜித்தை ஜனாதிபதி வேட்பாளராக்குமாறு கோரிக்கை

பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்றைய தினம் தனது பிறந்தநாளை கொண்டாடியிருந்த நிலையில் அவரிடம் பிறந்தநாள் பரிசாக அமைச்சர் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரான சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கக்கோரி அவிஸ்ஸாவளை தும்மோதர பகுதி மக்கள் நேற்றைய தினம் வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் கிராமத்தின் குரல் அமைப்பினால் குறித்த வழிபாட்டு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது, தனியார் ஊடகம் ஒன்றிடம் கருத்துத் தெரிவித்த அப்பகுதி பொதுமகன் ஒருவர் பிறந்தநாள் பரிசாக சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

1 comment:

  1. சஜித் பொருத்தமானவர் தான். ஆனால் உயர்தர சிங்கள மக்களிடத்தில் அவருக்கு செல்வாக்கு கிடையாது.

    ReplyDelete

Powered by Blogger.