போதைப்பொருள் வர்த்தகர்களை உள்ளே, வைத்துக்கொண்டு வெளியில் தேடும் அரசாங்கம்
போதைப்பொருள் வர்த்தகர்களை அரசாங்கத்திற்குள் வைத்துக் கொண்டு, வெளியில் தேடுவதாக, ஜேவிபியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அக்கரப்பத்தனை பசுமலை பகுதியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றை அடுத்து ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றும் போது, 20வது திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்டால், நாடாளுமன்ற ஆட்சிக்கால நிறைவுக்கு முன்பாகவே பொது தேர்தல் ஒன்றை நடத்த வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தின் ஆட்சிக்காலம் எதிர்வரும் 2020 செப்டம்பர் மாதம் 2 ஆம் திகதியே நிறைவடையவுள்ளது.
இந்தநிலையில், 20வது திருத்த சட்டம் குறித்த அறிவற்றவர்கள், ஜே.வி.யின் நடவடிக்கை மீது குறை கூறி வருகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
20வது அரசியலைப்பு திருத்த சட்டம் ஒன்றை கொண்டு வரும் அதே சமயத்தில், இதனூடாக அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையில் மாற்றம் ஒன்று கொண்டு வரப்படும் என்றால் அதனை மக்கள் விடுதலை முன்னணி முன்னின்று ஆதரிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment