Header Ads



ஏமாற்றப்பட்டோம், இனியும் ஏமாறமாட்டோம் - போராளிகளே புறப்படுங்கள்...!

நாட்டில் நாலா பக்கங்களிலும் அமைச்சர்கள் எம்பீக்கள் மற்றும் அரசியல் தொடர்புடையோர் அவர்களது வேலைப்பழுக்கலுக்கு அப்பால் கிராமம் கிராமமாகச் சென்று அவர்களது அரசியல் விளையாட்டுக்களை முன்வைத்துக் கொண்டிருப்பதை நாம் அறிகின்றோம்.

தேர்தல் ஒன்று நெருங்கிவிடால் இவர்களது சமூகப்பற்றும் சேவைகளும் மற்றும் தொழில் வாய்ப்புக்களும் வழங்குவது தொடர்பாக கவர்ச்சியான சொற்பிரயோகங்களை வாரி வழங்குவதில் வீரர்களாவர். இவற்றைப் பற்றி நாம் கொஞ்சம் விளக்கமாகவும் தெளிவாகவும் கேட்டால் புரளி செய்வதாக கூறுகின்றவர்கள் இருக்கத்தான் செய்கின்றது. பொது விடயங்களில் சம்பந்தப்படுகின்றவர்கள் தாம் புத்திசாலித்தனமாக தம் வேலைகளை சாதித்துக் கொள்ளவேண்டும் என உபதேசிப்பவர்களும் உண்டு.. நாம் இவர்களிடம் முன்வைக்கும் இந்த விடயத்துக்கு மட்டும் பதில் தருவார்களா....?
1.கடந்த கம்பஹா மாவட்ட தேர்தலின் போது சகோதரர் முஸ்தாக் மதனியை வேட்பாளராக முன் கொண்டுவந்தவர்கள் யார்...?

2.சகோதரர் சாபி ரஹீம் அவரது தேர்தல் பிரச்சாரத்தின் போது.. இரண்டாவது வருகின்ற வருக்கு தனது பதவிக்காலத்தில் இரண்டு வருடத்திற்கான பதவிப்பிரமானத்தை வழங்குவதாக வாக்களிதார்...அதற்கான முயற்ச்சிகளை எமது வேற்பாளர்கள் மேற்கொண்டார்களா..??? அதனை ஏனைய அரசியல் வாதிகளின் நேர்மையற்ற செயலைப்போன்று
நினைத்து கட்சியின் வழர்ச்சியில் தூரனோக்குடன் செயல்படவில்லை...

3. சகோதரர் முஸ்தாக் மதனி இரண்டாவது இடத்தைப் பெற்ற பின்பு , முதலைக் கண்னீர் விட்டு சுயனலத்துக்காக கட்சிமேல் ஆதரவு காட்டும் Candidates என்ன செய்தார்கள்...!?
கட்சியை வளர்த்தார்களா..!? இருந்த ஆதரவினையும் இல்லாது செய்து சுய நல அரசியல் வாதிகள் என்று நிறூபித்துக் காட்டிவிட்டீர்களே..

4.அரசியல் தூரனோக்கற்ற சந்தர்ப்ப அரசியல் செய்யும் இவர்கள் முஸ்தாக் மதனி (கஹடோவிட) அல்லாத ஒருவர் இரண்டாவது இடத்தை பெற்றுருந்தால்... எமது கிராமத்தினரைப்போல் சாதிக்காமல் இருக்கமாட்டார்கள்.ஆனால் அவர்கள் இன்று நியாயம் கற்பிக சமாதானம் பேசவும் எவ்வாறு முடியும்..!?
முன் வரப்போகின்ற கம்பஹா மாவட்டத்தேர்தலில்.... சகோதரர் சாபிரஹீம் என்ன வாக்குறுதிகளை முன்வைக்கப்போகின்றார்...!!? 

5.இவ்வாரானவர்களுக்கு , கிராமப் பற்றுள்ள போராளிகளும் ஆதரவாளர்களும் நடு நிலையாக சிந்திக்கும் அனைவரும் முறையான எதிர்ப்பை வழங்குவதே கம்பஹா மாவட்ட கிராமத்தவர்களின் கடமையும் நேர்மையுமாகும்..
    
சில அரசியல் வாதிகள் திட்டங்களை தேர்தல் காலங்களில் மட்டும் முன் வைத்து அதற்கான ஆரம்ப வேலைகளை செய்வதிலும் வல்லவர்களே... உதாரனத்திற்க்கு இந்த நல்லாட்சிக்கான 100 நாள் திட்டத்தில்,எமது தேசிய தலைவரும் குடி நீர் அமைச்சர் இன்று வரை ஏமாற்றியது போன்று அல்லவா( எஸ்டிமேட் தந்தார்கள்+ Engineers வந்தனர்+இறுதியாக வந்தவர்களை யாரோ விரட்டியதாகவும் கதை)

எனவே நாம் அவர்கள் செய்யப்போகின்ற வேலைகளுக்கு ஆதரவு கொடுப்பதில் மட்டும் நின்று விடாது துனிச்சலாக நாம் முகம் கொடுக்க வேண்டும்.நாம் ஏற்கனவே ஏமாற்றப்பட்டிருப்பதால் தான் மிகவும் தெளிவாகவும் நிதானமாகவும் நடந்து கொள்ள வேண்டும்.சிலர் முன்னின்று பேசுகின்றவர்களை முக்கியமான பேச்சுவார்த்தைகளுக்கும் பொது விடயங்களுக்கும் அழைப்பதை மறைமுகமாக cut செய்கின்றனர்.அவர்களது சுயனல தேவைகள சாதித்துக்கொள்ளும் வரை பொதுவான மற்றும் தனிப்பட்ட அழைபுக்களை விடுகின்றவர்களும் உள்ளனர்.

எம்மை(கிராமத்தை) ஏமாற்றப்பட முன் நாம் SLMC தேசிய தலைவர் மற்றும் ச.சாபிரஹீம் மற்று ஏனையவர்களுடனும் மிக நெறுக்கமாகவும் அவர்களோடு மரியதையுடனும் இருந்துள்ளோம்.
நாம் தலைவரிடம் தனிப்பட்ட எதனையும் கேட்டது கிடையாது.எமது கிராமத்தின் தேவைகளை கேட்டு நிறைய விண்ணப்பித்துத்தோம். ஆனால் கிடைகவில்லை  என்பதற்காக கட்சியை விட்டு ஒதுங்கவில்லை. பொறுமையாகவே இருந்தோம்..

சம்பந்தப்பட்ட ஆதாரங்களுடன் நிரூபிக்க முடியுமான ஆவனங்களை வைத்துருக்கும் (எமது கிராமத்துக்காக) எங்களை ஏமாற்றுபவர்களை ஆதரிக்க முடியுமா....??

-Wafa-

No comments

Powered by Blogger.