Header Ads



இம்முறை வரவுசெலவு திட்டம், ஒரு கனவு மாளிகை

தனியார் மயப்படுத்தப்பட்ட லிபரல் கொள்கையுடைய வரவு செலவு திட்டத்தையே நிதி அமைச்சர் முன்வதுள்ளார். இந்த வரவு செலவு திட்டம் ஒன்று  கனவு மாளிகையையே  என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்தது. 

2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை நிதி அமைச்சர் மங்கள சமரவீர பாரளுமன்றத்தில் சமர்ப்பித்தார். இந்த வரவு செலவு திட்டம் குறித்து மக்கள் விடுதலை முன்னணியின் கருத்தினை தெரிவிக்கும் போதே கட்சியின் ஊடகப்பேச்சாளர் விஜித ஹேரத் இதனைக் குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில். 

இம்முறை வரவு செலவு திட்டம் மக்களுக்கு சகல விதத்திலும் நன்மையான ஒன்றாக அமையும் என ஆரம்பத்தில் இருந்து அரசாங்கம் கூறிவந்தது. ஆனால் இந்த ஆண்டுக்கு முன்வைக்கப்பட்டுள்ள வரவு செலவு திட்டம் ஒரு கனவு மாளிகை என்றே கூற வேண்டும். அனைத்து யோசனைகளும் சாதாரண மக்களுக்கு நன்மையான ஒன்றாக கருத முடியாது. இதில் வியாபாரிகளுக்கும் தனியார் துறைசார் நலன்கருதிய ஒன்றாகவே முன்வைக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.