Header Ads



ஐ.தே.க.க்கு கோத்தபயவே சிறந்த போட்டியாளர் - சிறுபான்மை இனமக்களின் வாக்குகளை பெற முடியாது

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாய ராஜபக்ச போட்டியிட்டால், அது ஐக்கிய தேசிய முன்னணிக்கு பாரிய சவால் அல்ல என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

கோத்தபாய ராஜபக்சவினால், சிறுபான்மை இன மக்களின் வாக்குகளை பெற முடியாது. கடந்த ஆட்சிக்காலத்தில் கோத்தபாய ராஜபக்ச சிறுபான்மை மக்களுக்கு கொடுத்த தொந்தரவுகளை அவர்கள் மறக்கவில்லை.

ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணிக்கு சிறந்த போட்டியாளர் கோத்தபாய ராஜபக்சவே. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் ஆரம்பத்தில் இருந்து தனது அரசியலை ஆரம்பிக்க வேண்டும் எனவும் ராஜித குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

Powered by Blogger.