Header Ads



ரணிலை கைது செய்யுமாறு கோரிக்கை

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை கைதுசெய்து விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சேஹான் சேமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை கைதுசெய்து விசாரிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

வஜிராஷ்ரம விகாரையில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய போதே அவர் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

“மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி நடவடிக்கையானது பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கருத்துக்கு அமைய அவரை மையப்படுத்தியே இடம் பெற்றுள்ளது.

இந்த விடயம் அனைத்து தரப்பினரும் அறிந்ததே. பிணைமுறி மோசடியாளர்கள் ஆட்சியில் இருக்கும் வரையில் முறையான ஒரு தீர்வு ஒருபோதும் கிடைக்கப்பெறாது.

தலைமைறைவாகியுள்ள மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை நாட்டுக்கு மீள் அழைத்து வரும் நடவடிக்கைகளை பிரதமர் ஒருபோதும் மேற்கொள்ளமாட்டார்.

ஆகையினால் ஆட்சிமாற்றத்தின் பின்னரே குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.