Header Ads



இன்ஸ்டகிராம் காதலனை சந்திக்க, இந்தியா சென்ற இலங்கைப் பெண் தற்கொலை

இன்ஸ்டாகிராம் காதலனை சந்திக்க இலங்கையில் இருந்து சென்னை சென்ற இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வௌியிட்டுள்ளது. 

இது தொடர்பில் தமிழ ஊடகம் ஒன்று வௌியிட்டுள்ள செய்தியில், 

இலங்கையைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரது மகள் மலர்மேரி (வயது 22) மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம் சிங்கபெருமாள் கோயில் பகுதியைச் சேர்ந்த அவினாஷ் இடையே இன்ஸ்டாகிராம் மூலம் நட்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் அதன் பிறகு காதலர்களாக மாறியுள்ளனர். இருவரும் 7 மாதங்களாக காதலித்து வந்துள்ளனர். 

இந்நிலையில் மலர்மேரி தனது காதலன் அவினாஷை சந்திக்க கடந்த சில தினங்களுக்கு முன்பு இலங்கையில் இருந்து விமானம் மூலம் சென்னை சென்றுள்ளார். 

இதையடுத்து இந்த காதல் ஜோடி சென்னையின் பல இடங்களை சுற்றிப்பார்த்துள்ளதுடன், தன் காதலி மலர்மேரியை கடந்த 25ம் தேிக இலங்கைக்கு திருப்பி அனுப்ப அவினாஷ் முடிவு செய்தார். 

ஆனால் காதலன் அவினாஷ் உடன் பல இடங்களை சுற்றிய சந்தோஷத்தில் இருந்த மலர்மேரி அவரை விட்டு பிரிந்து செல்ல மறுத்துவிட்டாராம். இதையடுத்து காதலியை விடுதி ஒன்றில் தங்க வைத்துவிட்டு அவினாஷ் சென்றுள்ளார். 

இந்நிலையில் மலர்மேரி தங்கியிருந்த அறை நீண்ட நேரமாக திறக்கப்படாமல் இருந்ததால் சந்தேகம் அடைந்த விடுதி ஊழியர்கள் அறையின் கதவை தட்டிப்பார்த்து திறக்காததால், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது மலர்மேரி தூக்கிட்டு பிணமாக தொங்கியுள்ளார். 

தகவல் அறிந்து வந்த கூடுவாஞ்சேரி பொலிசார், மலர்மேரியின் உடலை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதையடுத்து வழக்கு பதிவு செய்த பொலிசார் இலங்கை பெண் மலர்மேரி தற்கொலைக்கு என்ன காரணம் என்பது குறித்து காதலன் அவினாஷ்சிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

No comments

Powered by Blogger.