நிதி அமைச்சரும் அரசாங்கமும் மக்களை ஏமாற்றி, வரிகளை கொண்டு ஆட்சியை நடத்த முயற்சி
நிதி அமைச்சரும் அரசாங்கமும் மக்களை தொடர்ந்தும் ஏமாற்றி வரிகளை கொண்டு ஆட்சியை நடத்தவே முயற்சித்து வருகின்றனர் என எதிர்க் கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார்.
2019ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டம் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பேசிய மகிந்த ராஜபக்ச,
வரிச்சுமை கூடிய வரவு செலவு திட்டத்தையே இம்முறையும் அரசாங்கம் முன்வைத்துள்ளது. இந்த வரவு செலவு திட்டத்தின் மூலமாக நாட்டினை முன்னெடுக்கவோ அல்லது மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவோ முடியாது. மாறாக நாட்டினை மேலும் கடன் சுமைக்குள் தள்ளும் வேலைத்திட்டமே முன்வைக்கப்பட்டுள்ளது.
நிதி அமைச்சரும் அரசாங்கமும் மக்களை தொடர்ந்தும் ஏமாற்றி வரிகளை கொண்டு ஆட்சியை நடத்தவே முயற்சித்து வருகின்றனர் என்றார்.
Post a Comment