ஜனாதிபதி வேட்பாளர் யாரென, இன்று தீர்மானம் எடுக்கப்படும்
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஆகியன இணைந்து அமைக்கப்படவுள்ள பொது கூட்டணியின், ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது தொடர்பில் இன்று (14) தீர்மானம் எடுக்கப்படுமென, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.
புஞ்சிபொரளையில் இன்று (14) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இதனை தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்து கருத்துரைத்த அவர்,
புதிய கூட்டமைப்பொன்றை அமைப்பது தொடர்பில் இன்று இடம்பெறவுள்ள பேச்சுவார்த்தையின் போது, இந்த தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக தெரிவித்த அவர், ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது குறித்து நாட்டுக்கு இப்போதே அறிக்கமாட்டோம் என்றார்.
Post a Comment