Header Ads



தூக்கு தண்டனைக்கான நாள், குறிக்கப்பட்டு விட்டது - மைத்திரி

போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கான திகதி தீர்மானிக்கப்பட்டு விட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறசேன தெரிவித்துள்ளார்.

சர்வ மத தலைவர்களுடன் கொழும்பு மோதர பகுதியில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டில் போதைப்பொருள் வர்த்தகம் தலைதூக்கியுள்ள நிலையில், போதைப்பொருள் வியாபாரம் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கான தண்டனையை நிறைவேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இதன் ஒரு கட்டமாக அலுகோசு பதவிக்கு விண்ணப்பித்தவர்களுக்கான நேர்முக தேர்வு எதிர்வரும் 2ம் திகதி இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments

Powered by Blogger.