Header Ads



“யாழ்பானத்தில் பிறந்து, புத்தளத்தில் வசித்த” பஷிர் ரிஸ்கான், சீனா பல்கலைக்கழக விரிவுரையாளராக தெரிவு

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், புத்தளம் ஸாஹிராவின் கற்றவருமான கலாநிதி பஷிர் ரிஸ்கான் சீனா Three Gogeores University சிரேஷ்ட விரிவுரையாளராக கடமையாற்ற இன்று -19.03.2019 சீனா பயணமாகிறார்.

இவர் முன்னாள் தர்கா நகர் தேசிய கல்வியல் கல்லூரி விரிவுரையாளராகவும், தற்சமயம் மகாவலி தேசியக்கல்வியல் கல்லூரி விரிவுரையாளராகவும் கடமையாற்றியவர்.

இவர் அகில இலங்கை ரீதியில் பல்வேறு உயர்தரம் , தொழில்வாண்மை மாணவர்களுக்கு நாடு ரீதியாகவும் வழிக்காட்டல் கருத்தரங்கிற்கு ஊக்குவிப்பு செயற்பாடுகள் மேற்கொண்டவர். 

இவர் யாழ்ப்பாணம் முன்னாள் பிரதி மேயர் MG பஷீர் மற்றும் மர்ஹூம் ஆசிரியை சுல்பா பஷீர் ஆசிரியர் அவர்களின் புதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல் - முஜாஹித் நிஸார்

No comments

Powered by Blogger.