முல்லைத்தீவு மாவட்ட உதவிப்பொலிஸ், அத்தியட்சகராக அப்துல் கபார் நியமனம்
பிரதான பொலிஸ் பரிசோதகராகவிருந்த அப்துல்கபார் உதவிப்பொலிஸ் அத்தியட்சகராகப் பதவியுயர்வுபெற்றார்.
கல்முனை மற்றும் சம்மாந்துறைப் பொலிஸ் நிலையங்களின் பிரதான பொலிஸ்நிலையப் பொறுப்பதிகாரியாக நீண்டகாலம் சேவையாற்றிய அப்துல் கபார் மக்களின் உச்சக்கட்ட நன்மதிப்பைப் பெற்றிருந்தவர்.
சிறந்த விளையாட்டுவீரனான அவர் மக்களுடன் இனமதபேதமற்று சிறப்பாக பழகுபவர்.
இந்நிலையில் உதவிப்பொலிஸ் அத்தியட்சகராக நேற்று முல்லைத்தீவு மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்டார். மாவட்டமொன்றிற்கு பொறுப்பாக அவர் முதல்முறையாக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment