Header Ads



"வெளிநாட்டில் தொழில்புரியும் இலங்கையர்களுக்கு, வாக்குரிமையை பெற்றுக்கொடுக்க வேண்டும்"

வெளிநாட்டில் தொழில் புரியும் இலங்கையர்களுக்கு வாக்குரிமையை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என சபையில் தெரிவித்த மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்னெத்தி, நாட்டுக்கு வரும் அன்னியச்செலாவணியில் வெளிநாட்டு வேலைவாய்ப்பில் இருந்தே கூடுதலாக கிடைக்கப்பெறுவதாகவும் குறிப்பிட்டார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுச்செல்லும் அதிகமானவர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு கடந்த காலங்களில் முகம்கொடுத்து வந்தனர். 

ஆனால் தற்போது சவுதி, குவைட் போன்ற நாடுகளில் அந்த பிரச்சினை குறைந்துள்ளது. அந்த நாடுகளில் இருக்கும் எமது தூதுவர்கள் நல்லமுறையில் செயற்படுவதால்தான் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. 

அத்துடன் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் இருக்கும் அதிகாரிகளும் வெளிநாட்டு முகவர் நிறுவனங்களும் இணைந்து சில மோசடிகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் இதன்போது தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.