Header Ads



திகன கலவரம்,, முடிந்துவிட்டது என யார் சொன்னது...? அமித் வீரசிங்க விநியோகிக்கும் இனவாத கைநூல்

- சண்டே ஒப்சேவர் = ராஜித ஜாகொட ஆராச்சி -

ஒரு வரு­டத்­திற்கு முன்னர் யாராலும் அடை­யாளம் காணப்­ப­டாத ஒரு அமை­தி­யான கிரா­ம­மாக திகன இருந்­தது. பின்னர் அந்­தக்­கி­ராமம் வன்­மு­றை­க­ளுக்கும் வெறுப்புப் பேச்­சுக்கும் ஏற்ற இட­மாக மாறிப் போனது. அவ்­வாறு வன்­மு­றையால் பாதிக்­கப்­பட்ட திக­னையைச் சேர்ந்த ஸம்­ஸு­தீ­னு­டைய வீடு இன்று புனர்­நிர்­மாணம் செய்­யப்­பட்­டுள்­ளது. கல­வ­ரத்­தினால் சேத­மான முஸ்­லிம்­க­ளு­டைய வீடுகள் மற்றும் வியா­பாரத் தலங்கள் மீள் நிர்­மாணம் செய்­யப்­பட்டும் வரு­கின்­றன.

பாதணி தயா­ரிப்­பா­ள­ரான ஸம்­ஸுதீன் திகன பிர­தே­சத்தின் மத்­தி­யி­லுள்ள புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்ட தனது வீட்டில் வசித்து வரு­கிறார். 60 வய­தான அவர் எங்­களை அவ­ரது அறைக்கு அழைத்து வர­வேற்­ற­தோடு தேநீர் உப­சாரம் செய்­யு­மாறு தனது மனை­விக்கு சைகை மூலம் காட்­டினார்.

கண்­டியின் திக­னயில் இடம்­பெற்ற இன­வாத வன்­மு­றை­யினால் ஸம்­ஸு­தீ­னு­டைய வீடு மற்றும் கடை என்­பன தீயினால் எரிக்­கப்­பட்­டன. இதன்­போது அவ­ரு­டைய இளைய மகன் அப்துல் பாஸித்  உயி­ரி­ழந்தார்.

ஸம்­ஸுதீன், அவ­ரது மகனின் இழப்­பினால் கடு­மை­யான அதிர்ச்­சியும், மன­வே­த­னையும் அடைந்து நிலை­கு­லைந்து போயுள்ளார்.

“எங்­க­ளு­டைய ஊரில் சம­யங்­க­ளுக்­கி­டையில் எந்த ஒரு பிரி­வி­னையும் இருந்­த­தே­யில்லை. என்­னு­டைய இளை­ய­மகன் பாஸித்­துக்குக் கூட எல்லா இனத்­திலும், எல்லா மதத்­திலும் நண்­பர்கள் இருந்­தார்கள். நாங்கள் சிங்­கள மக்­க­ளுடன் பல வரு­டங்­க­ளாக அமை­தி­யா­கவே வாழ்ந்தோம். நடந்த விட­யங்­களை என்னால் இன்­னமும் நம்ப முடி­ய­வில்லை. எல்­லாமே ஒரு ­க­னவு போல இருக்­கி­றது” என ஸம்­ஸுதீன் கூறு­கிறார்.

ஸம்­ஸுதீன், தனது ஒன்­ப­தா­வது வயதில் இருந்தே பல்­வேறு தொழில்­களை மேற்­கொண்டு வந்­த­தா­கவும், வாழ்­கையில் ஏற்ப்­பட்ட பல்­வேறு பிரச்­சி­னை­க­ளுக்குப் பின்னர் திக­னயில் சொந்த வியா­பா­ரத்­தளம் ஒன்றை உரு­வாக்­கி­ய­தாகத் தெரி­வித்தார். “நான் சிறு வய­தி­லி­ருந்தே கடு­மை­யாக உழைத்தேன். பின்னர் எனது சேமிப்பை வைத்து இந்த வீட்டில் எனது தொழிலை தொடங்­கினேன்” என்றார்.

அது 2018 மார்ச் ஐந்தாம் திகதி. அதற்கு சில நாட்­க­ளுக்கு முன்னர் 4 முஸ்லிம் இளை­ஞர்கள் ஒரு சிங்­க­ள­வரைத் தாக்­கி­யதில் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்டு பின்னர் அவர் உயி­ரி­ழந்­ததைத் தொடர்ந்து வன்­மு­றைகள் தொடங்­கின. முஸ்­லிம்­க­ளு­டைய உடை­மை­களை அழிக்க வேண்டும் என காத்துக் கொண்­டி­ருந்­த­வர்­க­ளுக்கு இது ஒரு நல்ல சந்­தர்ப்­ப­மாக அமைந்­தது.

“எனது வீட்­டுக்கு தீ வைக்­கப்­பட்டு பற்றி எரிந்­த­போது நானும் எனது மனை­வியும் வீட்­டி­லி­ருந்து வேக­மாக பாய்ந்து வெளி­யேறி விட்டோம். பாஸித் மேல் தளத்தில் இருந்­ததால் அவனால் உட­ன­டி­யாக வெளி­யேற முடி­ய­வில்லை” என பாஸித்­து­டைய தந்தை ஸம்­ஸுதீன் நினை­வு­ப­டுத்­து­கிறார்.

ஸம்­ஸு­தீ­னு­டைய இரண்­டா­வது மகன் பயாஸ் வீட்டின் கூரைக்கு ஏறி பாஸித்தை தேட முயன்ற போது கூரை­யோடு சேர்த்து கீழே விழுந்­து­விட்டார். பின்னர் அவ­ருக்கு வேறு வழி இல்­லா­ததால் வீட்­டி­லி­ருந்து வெளி­யேறித் தப்­பினார். எனினும் அவ­ரது உடம்பில் தீ பற்றிக் கொண்­டது.  “நெருப்­பினால் எரிந்து கொண்­டி­ருந்த எனது மகனைப் பார்த்து அனை­வரும் சிரித்­தார்கள். யாரும் அவரை தீயில் இருந்து விடு­விக்க வர­வில்லை. இருந்­தாலும் பொலிஸார் அவரை வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­தித்­தார்கள். வைத்­தி­ய­சா­லையில் 2 பேரை அனு­ம­தித்­துள்­ள­தாக பொலிஸார் சொன்­னார்கள். அதில் பாஸித்தும் ஒரு­வ­ராக இருப்பார் என்று நினைத்தோம். ஆனால், அடுத்த நாள் அவ­ரது ஜனா­ஸாதான் கிடைத்­தது” என்று கூறி­ய­வாறே நிரம்பி வழிந்த கண்­ணீரை தனது இரு கைக­ளாலும் துடைக்­கிறார் தந்தை ஸம்­ஸுதீன். தன்னை அறி­யா­மலே அவ­ரது ஊன்­றுகோல் தரையில் விழுந்­தது.

“பிரேத பரி­சோ­தனை அறிக்­கையில் பாஸித் மார்ச் 4 ஆம் திகதி இறந்­த­தாக சொல்­லப்­பட்­டி­ருக்­கி­றது. ஆனால் மார்ச் 4 இல் எமது வீட்டில் எதுவும் நடக்­க­வில்லை. எல்லாம் மார்ச் 5 இல் தான் நடந்­தது. நேர்­மை­யாக சொல்ல வேண்டும் என்றால் நாங்கள் இப்­போது வேறு யாரோ ஒரு­வ­ரு­டைய வீட்டில் இருப்­பது போலவே தோன்­று­கி­றது” என்று கூறி­ய­வாறே வீட்டின் புதிய சுவர்­களை பார்க்­கிறார்.

திக­னயில் ஏற்­பட்ட கல­வ­ரத்­தினால் ஸம்­ஸுதீன் சுமார் 3 மில்­லியன் பெறு­ம­தி­யான சொத்­துக்­களை இழந்­துள்ளார். தனது வீடு மற்றும் கடையின் பெறு­ம­தியே இது­வாகும். என்­றாலும் அர­சாங்­கத்­தினால் வெறும் 150,000 ரூபாய் மாத்­தி­ரமே நட்ட ஈடாக வழங்­கப்­பட்­டது.

ஒரு சில நிமி­டங்கள் கழித்து ஸம்­ஸு­தீ­னு­டைய மற்­றொரு மகன் பஸாலும் எம்­மோடு இணைந்து கொண்டார். 37 வய­து­டைய பஸால் ஒரு மௌலவி ஆவார். சென்ற வருடம் இடம்­பெற்ற சேதங்­களை புனர்­நிர்­மாணம் செய்ய பள்­ளி­வா­சலில் இருந்தே நிதிகள் கிடைக்­கப்­பெற்­ற­தாக அவர் கூறு­கிறார்.

“எமக்கு அழுத்­தங்­களைத் தந்த அந்த நாள் இன்னும் மறை­ய­வில்லை. அர­சாங்கம் வீட்­டுக்­காக 50,000 ரூபாவும் கடைக்­காக 100,000 ரூபாவும் வழங்­கி­யது. அத்­தோடு இது ஆரம்­பத்தில் வழங்­கப்­படும் தொகை என்றும் பின்னர் மீதித்­தொ­கையை வழங்­குவோம் என்றும் சொன்­னார்கள். ஆனால் அதன் பின்னர் எந்தத் தொகையும் கிடைக்­க­வில்லை. எனினும் எமது மஸ்ஜித் மூல­மாக முஸ்­லிம்­க­ளு­டைய நன்­கொ­டைகள் ஊடாக எமக்கு நிதி கிடைத்­தது. மஸ்­ஜிதில் இருந்து நிதி கிடைக்­காமல் இருந்­தி­ருந்தால் எங்­க­ளுக்கு செல்­வ­தற்கு வேறு இடமே  இருந்­தி­ருக்­காது” என்று பஸால் கூறு­கிறார்.

ஆகஸ்ட், 2018 இல் 205 மில்­லியன் ரூபா நிதி, நட்­ட­ஈடு வழங்­கு­வ­தற்­காக ஒதுக்­கப்­பட்­டுள்­ள­தாக பிர­தமர் ரணில் தெரி­வித்­தி­ருந்­தது நினை­வூட்­டக்­கூ­டிய ஒன்­றாகும். “அந்தப் பணத்­துக்கு என்ன நடந்­தது என எங்­க­ளுக்குத் தெரி­யாது. இதி­லி­ருந்து அர­சாங்கம் எமது இனத்­துக்கும் சமூ­கத்­துக்கும் உறு­து­ணை­யாக இருக்கும் என்ற நம்­பிக்கை இல்­லாமல் போய்­விட்­டது” என பஸால் தெரி­விக்­கிறார்.

குறித்த இன­வாத வன்­மு­றை­யுடன் சம்­பந்­தப்­பட்­ட­வர்கள் சிங்­க­ள­வர்­களில் ஒரு சிலரே என்­பதை பஸால், ஸம்­ஸுதீன் ஆகிய இரு­வரும் புரிந்து வைத்­துள்­ளார்கள். சிங்­க­ள­வர்­களுள் பெரும்­பா­லானோர் அந்த தாக்­கு­தல்­க­ளுக்கு எதி­ரான கருத்­தி­னையே கொண்­டி­ருப்­பார்கள் என்றே அவர்கள் இரு­வரும் நம்­பு­கி­றார்கள்.

“பிக்­கு­மார்கள் மற்றும் அதி­க­மான சிங்­கள மக்கள் எங்­க­ளுக்கு உத­வி­னார்கள். அத்­துடன் சிங்­க­ள­வர்­க­ளுக்கும் முஸ்­லிம்­க­ளுக்கும் இடையில் எந்­த­வி­த­மான சமய முரண்­பா­டு­களும் இல்லை என்று நான் நம்­பு­கிறேன். இது எல்லாம் அர­சியல் சார்ந்­தது. அர­சியல் வாதி­களே இதனை உரு­வாக்­கு­கி­றார்கள். மேலும், சிங்­க­ள­வர்கள் மத்­தியில் எமது வியா­பாரம் தொடர்­பாக மிகைப்­ப­டக்­கூறி அவர்­களை பொறா­மை­ய­டையச் செய்­கி­றார்கள்” என பஸால் கூறு­கிறார்.

இஸ்­லாத்தை அனை­வ­ருக்கும் கற்­பிக்க வேண்­டி­யது அவ­சியம் என்­பது தொடர்­பான ஒரு விழிப்­பு­ணர்வு தோன்­றி­யுள்­ள­தாக தான் எண்­ணு­வ­தாக பஸால் தெரி­விக்­கிறார்.

“பெரும்­பா­லான சிங்­க­ள­வர்கள் இஸ்லாம் தொடர்­பாக தப்­ப­பிப்­பி­ரா­யங்­களை வளர்த்­துக்­கொண்­டுள்­ளனர். அவர்கள் ஒவ்­வொரு நேரத்­திலும் வித்­தி­யா­ச­மான பிரச்­சி­னை­களை கொண்­டு­வ­ரு­கி­றார்கள். ஒரு நேரத்தில் ஹலால் இன்­னொரு நேரத்தில் புர்கா அடுத்­தது கருத்­தடை மாத்­திரை என இது நீண்டு செல்­கி­றது. இது போன்ற கற்­ப­னை­களை நாம் எமது சமூ­கத்தில் இருந்து ஓரங்­கட்ட வேண்டும்” என்றார்.

சமூக வலைத்­த­ளங்­களில் போலி­யான தக­வல்­களை பரப்பி இன­வா­தத்தைத் தூண்­டிய மஹாசோன் பல­கா­யாவின் ஸ்தாபகர் அமித் வீர­சிங்­கவும் திக­னையச் சேர்ந்­தவர் தான். அவரும் பஸாலும் கெங்­கல்ல சிங்­கள மஹா வித்­தி­யா­ல­யத்தில் ஒன்­றா­கவே கல்­வியைக் கற்­றுள்­ளார்கள்.

“பாதை நெடுக பல்­வேறு இடங்­களில் தடை­வே­லி­களைப் போட்­டி­ருந்­தார்கள். அர­சாங்கம் இவற்றைத் தடுத்து நிறுத்­தி­யி­ருக்க வேண்டும். ஆனால் அவர்கள் செய்­ய­வில்லை. செய்­தி­ருந்தால் இன்று எனது மகன் உயி­ரோடு இருந்­தி­ருப்­பான்”­என்று கூறி­ய­வாறே வீட்டின் வெளிப்­பு­றத்தை ஸம்­ஸுதீன் பார்க்­கிறார்.

கல­வ­ரத்தை நேரில் கண்­ட­வர்­களும் அவர்­க­ளு­டைய கொடூ­ர­மான அனு­ப­வங்­களை எம்­முடன் பகிர்ந்து  கொண்­டனர்.

“இந்தக் கல­வ­ரத்தில் தலை­யிட விசேட அதி­ர­டிப்­ப­டை­யினர் கூட பயப்­பட்­டார்கள். இரா­ணு­வத்­தி­னு­டைய தலை­யீடு இன்றி நிலை­மையைக் கட்­டுப்­ப­டுத்­தி­யி­ருக்­கவே முடி­யாது. இல்­லா­விட்டால் நாங்கள் அனை­வ­ருமே இறந்­தி­ருப்போம்” என தனது பெயரைக் குறிப்­பிட விரும்­பாத திக­னையைச் சேர்ந்த ஒருவர் தெரி­வித்தார்.

நாம் அடுத்­த­தாக சென்ற இடம் அம்­பால. அது திக­னயில் இருந்து 20 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்­துள்­ளது. திகன கல­வரம் ஏற்­பட முன்னர் 4 முஸ்லிம் இளை­ஞர்கள் தாக்­கி­யதில் உயி­ரி­ழந்­த­தாக கூறப்­படும் குமா­ர­சிங்­கவின் குடும்­பத்தை சந்­திக்க வேண்டும் என எண்­ணினோம்.

குமா­ர­சிங்­கவின் மனைவி திலகா பத்­மஸ்ரீ அப்­போது தான் 2 பிள்­ளை­க­ளையும் பாட­சா­லை­யி­லி­ருந்து வீட்­டுக்கு கூட்டி வந்து இளைப்­பாறிக் கொண்­டி­ருந்தார்.

“இப்­போது ஒரு வருடம் கடந்­து­விட்­டது. எனது கண­வனின் மரணம், எனது குடும்­பத்­துக்கு அள­விட முடி­யாத இழப்­பாகும். பிர­தமர், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் வீட்­டுக்கு வந்து குழந்­தை­க­ளுக்கு உத­வு­வ­தா­கவும் வீட்டைக் கட்டித் தரு­வ­தா­கவும் வாக்குத் தந்­தார்கள். ஆனால் இப்­போது அனை­வரும் எங்­களை மறந்­து­விட்­டார்கள்” என அவர் தெரி­வித்தார்.

திகன கல­வ­ரத்தின் போது குமா­ர­சிங்­கவின் குடும்­பத்­தினர் இறுதிக் கிரியை வேலையில் முழுக்­க­வ­னத்­தையும் செலுத்­தி­யி­ருந்­ததால் கல­வ­ரத்தை அவர்கள் யாரும் நேரில் காண­வில்லை.

“எங்­க­ளுக்கும் முஸ்­லிம்­க­ளுக்கும் இடையில் எந்­த­வி­த­மான பிரச்­சி­னை­களும் இருந்­த­தில்லை. நாங்கள் இப்­போதும் முஸ்லிம் கடை­க­ளுக்குச் செல்­கிறோம். வெளி­யூர்­களில் இருந்து வந்­த­வர்­க­ளா­லேயே தாக்­கு­தல்கள் நடந்­தி­ருக்­கி­றது” என திலகா தெரி­வித்தார்.

கல­வ­ரத்­துக்குப் பின்னர்  முஸ்லிம் குடும்­பங்கள் உட்­பட பலரும்   குமா­ர­சிங்­க­வு­டைய குடும்­பத்­துக்கு பல்­வேறு உத­வி­களை வழங்­கினர். “ கடந்த ஜன­வரி முதலாம் திகதி  பெர­கட்­டிய ஆல­யத்­துக்கு  வந்த ஒரு குடும்­பத்­தினர் 50 000 ரூபா பணத்தை எமக்குத் தந்­தார்கள்” என திலகா தெரி­வித்தார்.

நாங்கள் கொழும்­புக்குத் திரும்பிச் செல்­லும்­போது கோம­கொட விகா­ரையில் வாக­னத்தை நிறுத்­தினோம். அங்கு  கல­வர காலத்தில் ஒரு சில முஸ்லிம் குடும்­பங்­க­ளுக்கு பாது­காப்பு வழங்­கிய அந்த விகா­ரையின் விகா­ரா­தி­ப­தியை சந்­தித்தோம். அவர் எம்­மிடம் பின்­வ­ரு­மாறு தெரி­வித்தார்.

”  சட்­டத்தை நிலை­நாட்ட வேண்­டிய அதி­கா­ரிகள் மாத்­தி­ர­மன்றி சமயத் தலை­வர்­களும் சமூ­கங்­களை வீழ்த்­து­வ­தி­லேயே கவனம் செலுத்­து­கி­றார்கள். இனங்­க­ளுக்­கி­டை­யி­லான பிரி­வி­னை­களை இல்­லா­ம­லாக்க கலை சம்­பந்­தப்­பட்ட அம்­சங்­களால் முடியும். ப்ரெட்டி சில்வா மற்றும் குண­தாச கபுகே போன்ற கலை­ஞர்கள் அதை சரி­வரச் செய்­தார்கள். தற்­போ­தைய கலை­ஞர்கள் அதைச்­செய்­வ­தே­யில்லை. எந்த நாட­கத்­தி­லா­வது முஸ்லிம் பெண்­ணொ­ருத்­தியை சிங்­கள இளைஞன் திரு­மணம் செய்­வது போன்ற காட்­சிகள் இருந்­த­துண்டா?  இத­யத்தை குண­மாக்க கலை­யம்­சங்­களால் முடியும். தற்­போ­தைய ஊட­கங்கள் ஹிந்தி நாட­கங்­களை மொழி­பெ­யர்த்து ஒளி­ப­ரப்­பு­வ­தி­லேயே கவனம் செலுத்­து­கி­றது. இது தான் இங்­குள்ள மோச­மான நிலைமை” என்றார்.

கோம­கொட விகா­ரையின் விகா­ரா­தி­பதி கஹ­கல தம்­மா­னந்த தேரர் திகன கல­வரம் நடந்த தினத்தில் தனக்கு ஏற்­பட்ட அனு­ப­வத்தை இவ்­வாறு கூறு­கிறார்.

“எனக்கு அந்த நாள் நினைவில் இருக்­கி­றது. நான் எனது அறையில் இருக்கும் போது, விகா­ரையை நோக்கி ஒரு சில முஸ்லிம் குடும்­பங்கள் வரு­வ­தாக ஒரு சிறுவன் வந்து சொன்னான். உண்­மையைச் சொல்ல வேண்டும் என்றால், அவர்கள் விகா­ரையை தாக்க வரு­கி­றார்கள் என்றே நினைத்தேன். ஏனென்றால் அது­போன்ற வதந்­தி­களே அந்­நே­ரத்தில் அதி­க­மாகப் பர­வி­யி­ருந்­தன.

நான் எனது அறையை விட்டு விகா­ரைக்குச் சென்ற போது அங்கு 30 இற்கும் மேற்­பட்ட முஸ்லிம் குடும்­பங்கள் ஒன்று கூடி­யி­ருந்­தார்கள். அவர்கள் அனை­வரும் தங்­களைக் காப்­பாற்­று­மாறு கெஞ்­சி­னார்கள். ‘ஸாது குறைந்­தது எங்­க­ளது குழந்­தை­க­ளை­யா­வது காப்­பாற்­றுங்கள்” என்று ஒரு தாய் அழுது கொண்டே சொன்னார். எனக்கு அது மிகவும் கஷ்­ட­மான ஒரு தரு­ண­மாக இருந்­தது. நான் அவ­ச­ர­மாக முடி­வெ­டுக்க வேண்­டி­யி­ருந்­தது. மறு­முறை யோசிக்­காமல் விகா­ரையின்  பிர­சங்க மண்­ட­பத்தை அவர்கள் தங்­கு­வ­தற்­காக ஏற்­பாடு செய்தேன்.

விகா­ரைக்கு மிகவும் நெருக்­க­மான ஒரு சில இளை­ஞர்­களை நான் அவ­ச­ர­மாகத் தொடர்பு கொண்டேன். ‘அவர்­களை அனுப்பி விடா­தீர்கள் ஹாமி­து­ரு­வனே. நாங்கள் வந்து கொண்­டி­ருக்­கிறோம்’ என்று சொன்­னார்கள். அவர்கள் அவ­ச­ர­மாக வந்­தார்கள்.. வந்து பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு எந்த வித தயக்­கமும் இன்றி உத­வி­னார்கள். நாங்கள் உணவு சமைத்து அவர்­க­ளுக்கு வழங்­கினோம். சிறு­வர்­க­ளுக்கு பால் வழங்கியதோடு தலையணை, மெத்தை போன்றவற்றையும் வழங்கினோம். அந்த நேரத்தில் அனேக சிங்களவர்கள் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அந்த முஸ்லிம்களை பாதுகாக்க வேறென்ன செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டே இருந்தார்கள். அதன் பின்னர் பொலிஸார் வந்து பாதுகாப்பளித்தார்கள். அடுத்த நாள் காலை அவர்கள் அனைவருக்கும் பாதுகாப்பாக வீடு செல்ல முடிந்தது.

அவர்கள் விகாரைக்கு பாதுகாப்புத் தேடி வந்தார்கள். நான் அவர்களது நம்பிக்கையை தகர்க்க விரும்பவில்லை. சிங்கள பௌத்தர்களே அந்தத் தாக்குதல்களை நடத்தியுள்ளார்கள். என்னவாக இருந்தாலும் நான் உறுதியாகச் சொல்வது என்னவென்றால், அவர்கள் உண்மையான பௌத்தர்களாக இருந்திருந்தால் இது போன்ற இழி செயல்களை செய்திருக்கவே மாட்டார்கள்.

திகன சம்பவம் இப்போது முடிந்து விட்டது. ஆனால் முழுமையாக முடிந்து விட்டது என்று யார் சொன்னது? மஹாசோன் பலகாயவின் அமித் வீரசிங்க, தற்போது இனவாதத்தை தூண்டும் வகையிலான கைநூல் தொகுப்பொன்றை மக்களுக்கு விநியோகித்து வருகின்றார். இது சிங்கள புத்தாண்டு சீசனில் முஸ்லிம்களுடைய கடைகளில் பொருட்களை வாங்க விடாமல் புறக்கணிக்கச் செய்வதற்கான வேலையாகும். ஒரு சில சிங்கள தொழிலதிபர்களும் அமித்துக்கு உடந்தையாக இருக்கிறார்கள் என்றே நான் நினைக்கிறேன்” என்றார்.-Vidivelli

2 comments:

  1. அந்த புத்தகத்தை உடனடியாக எடுத்து இது தொடர்பாக ஈடுபாடு காட்டும் முஸ்லிம் சட்டத்தரணிகளிடம் கொடுத்து அதற்கு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்களை கலந்தாலோசனை செய்வதுதான் புத்திசாலித்தனம். சந்தர்ப்பத்தை நழுவவிட வேண்டாம் என இந்த உம்மத்தின் பொறுப்பானவர்களை தயவாகக் கேட்டுக் கொள்கின்றேன்.

    ReplyDelete
  2. ஆமாம் , கோட்டாபாய ஜனாதிபதியாவது உறுதியாகிவிட்ட பிறகு இந்த இனவாத கும்பல்கள் அமைதியாக இருக்காது .

    ReplyDelete

Powered by Blogger.