Header Ads



பொதுமக்களுக்கு அரச, ஹஜ் குழுவின் வலியுறுத்தல்

முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தில் பதிவு செய்து கொள்­ளப்­ப­டாத எந்­தவோர் ஹஜ், உம்ரா முகவர் நிலை­யங்­க­ளி­னூ­டாகவும் ஹஜ், உம்ரா பய­ணங்­களை மேற்­கொள்ள வேண்டாம் என அரச ஹஜ் குழு மக்­க­ளிடம் வேண்­டுகோள் விடுத்­துள்­ளது.

திணைக்­க­ளத்தில் பதிவு செய்து கொண்­டி­ராத போலி ஹஜ், உம்ரா முக­வர்கள் ஊடாக பய­ணங்­களை மேற்­கொண்ட பய­ணிகள் இம்­மு­கவர் நிலை­யங்கள் தொடர்பில் பல்­வேறு முறைப்­பா­டு­களைச் செய்­துள்­ள­த­னாலே இவ் அறி­வு­றுத்தல் விடுக்­கப்­ப­டு­வ­தாக அரச ஹஜ் குழுவின் தலைவர் எம்.ரி. சியாத் தெரி­வித்தார். அவர் தொடர்ந்தும் இது தொடர்பில் கருத்து தெரி­விக்­கையில்;

திணைக்­க­ளத்தில் பதிவு செய்­யப்­ப­டாத முகவர் நிலை­யங்கள் ஊடாக பய­ணங்­களை மேற்­கொள்­ப­வர்கள் தொடர்பில் திணைக்­க­ளமோ ஹஜ் குழுவோ எந்தப் பொறுப்­பி­னையும் ஏற்­காது. அவ்­வா­றான முறைப்­பா­டு­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுப்­ப­திலும் பிரச்­சி­னைகள் உரு­வாகும்.

எனவே பய­ணிகள் பதிவு செய்யப்பட்ட முகவர் நிலையங்களினூடாகவே பயணங்களை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

No comments

Powered by Blogger.