Header Ads



திருமண சேலைக்குள் மறைத்து, ஐஸ் போதைப்பொருள் கடத்தல் - குற்றவாளி பிடிபட்டான் (படங்கள்)


இந்தியாவின் தமிழகத்தை சேர்ந்த சந்தேகநபர் ஒருவர் சட்டவிரோதமான முறையில் போதைப்பொருளை இலங்கைக்குள் கொண்டுவரமுற்பட்டபோது சுங்கஅதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

திருமண சேலைக்குள் மறைத்து கொண்டுவரப்பட்ட 2 மில்லியன் ரூபா பெறுமதியான 200 கிராம் ஐஸ் பேதைப்பொருளுடன் இந்திய பிரஜை ஒருவரையே சுங்கஅதிகாரிகள் கைதுசெய்துள்ளனர். 

சென்னையை சேர்ந்த நபர் ஒருவர் 2 மில்லியன் ரூபா பெறுமதியான 200 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன்  இன்று சனிக்கிழமை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தபோது குறித்த நபரின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டு பயணப்பொதியை சோதனையிட்டபோது 45 வயதான  நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். 

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.



No comments

Powered by Blogger.