கல்முனை பிரதேச செயலக விவகாரம், முஸ்லிம் - தமிழ் முரண்பாடுகள் ஏற்படாது தீர்வு காணவே முயற்சிக்கிறோம்
கல்முனை பிரதேச செயலகம் குறித்த பிரச்சினையில் முஸ்லிம் -தமிழ் மக்களிடையே முரண்பாடுகள் ஏற்படாத வகையில் தீர்வுகளை எட்டவே முயற்சிகின்றோம்.
இந்த விடயத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமுகமாக தீர்வு காண தயாராக இருப்பதாகவும், பிரதமர் தலையிட்டு தீர்வுகளை பெற்றுத்தர வேண்டும் எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு சபையில் தெரிவித்தது.
பாராளுமன்றத்தில் வரவு செலவு திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இடம்பெற்ற வேளையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா இதனை குறிப்பிட்டார்.
மாவை ஐயா, கிழக்கின் தமிழ் பகுதி ஒன்றை தரம் உயர்த்துவதற்கு முஸ்லிம்களின் அனுமதி தேவையில்லை
ReplyDelete