வீதி அபிவிருத்தி அதிகாரசபையின், நடமாடும் சேவை நாளை
வீதி அபிவிருத்தி அதிகாரசபையில் அம்பாறை மாவட்டத்தில் கடமைபுரியும் வீதிப்பராமரிப்புத் தொழிலாளர்களுக்கான நடமாடும் சேவையானது நாளை (07) சம்மாந்துறை வேலைப்பிரிவு காரியாலயத்தில் காலை 9.00 மணி முதல் இடம்பெறவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் மேலதிக மாகாணப் பணிப்பாளர் ஐ.எல். அமீனுல் பாரி தெரிவித்தார்.
இதுபற்றி அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்நடமாடும் சேவையானது முதற்கட்டமாக கல்முனை நிறைவேற்றுப் பொறியியலாளர் பிரிவிற்குட்பட்ட வீதிப்பராமரிப்பு தொழிலாளர்களுக்கே இடம்பெறவுள்ளது.
இதில் ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதிய உத்தியோகத்தர்களின் பிரசன்னத்துடன் இடம்பெறவுள்ள இந்நடமாடும் சேவையில் பெயர்மாற்றம், நியமனத் திகதி மாற்றம், ஊழியர் சேமலாப நிதியக் கொடுப்பனவு மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியக் கொடுப்பனவுகளில் காணப்படும் பல குறைபாடுகள் உடன் நிபர்த்தி செய்து கொடுக்கப்படவுள்ளது.
எனவே மேற்படி விடயங்களில் பிரச்சினைகளையுடைய ஊழியர்கள் தங்களது பிரச்சினைகளை இலகுவாகத் தீர்த்துக் கொள்வதற்கான சிறந்ததொரு சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளது.
மேலும் எதிர்வரும் மாதமும் அம்பாறை மற்றும் அக்கரைப்பற்று ஆகிய நிறைவேற்றுப் பொறியியலாளர் பிரிவுகளைச் சேர்ந்த வீதிப்பராமரிப்புத் தொழிலாளர்களுக்கும் இந்நடமாடும் சேவை இடம்பெறவுள்ளதாக மாகாணப் பணிப்பாளர் ஐ.எல். அமீனுல் பாரி மேலும் தெரிவித்தார்.
Post a Comment