Header Ads



திகன சம்பவங்கள் ஏற்படக்கூடாது என ஏற்றுக்கொண்டாலும், எமது மன நிலையைப் பொறுத்தே அது அமையும்

-JM.Hafeez-

எமக்கு மத்தியில் மனப்பாங்கு மாற்றம் ஏற்படாதவரையில் இலங்கையில் இனங்களுக்கிடையிலான முரண்பாடுகளை களைவது சாத்தியப்படாது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கண்டி மாவட்ட இணைப்பாளர் திருமதி குமுதினி விதானகே தெரிவித்தார். (25.3.2019)

கண்டி ஓக்ரைன் ஹோட்டலில் இண்டர்நியூஸ் நிறுவனம் ஒழுங்கு செய்த அரச உத்தியோகத்தர்களுக்கான இன நல்லிணக்கம் மற்றும் பல்லின வாதம் தொடர்பான செயலமர்விலே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது-

நாம் மனித உரிகைள் ஆணைக்கு என்ற வகையில் பாரிய முயற்சி எடுத்தாளும் சட்டத்தால் எதனையும்சாதிக்க முடியாது. தனி நபர் ஒவ்வொருவரதும் மனதில் மாற்றம் வரவேண்டும். மனப்பாங்கு மாற்றம் வராத வரையில் எதனையும் மாற்ற முடியாது. 

கடந்தகால அனுபவங்களை நோக்கும் போது இனி திகனை சம்பவங்களோ அல்லது வடகிழக்க யுத்தமோ ஏற்படக்கூடாது என்று சகலரும் ஏற்றுக் கொண்டாலும் எமது மன நிலையைப் பொறுத்தே அது தீர்வாக அமையும். ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டாலும் அது நிரந்தரத் தீர்வாகக் கொள்ள முடியாது. நிரந்தரமாக அதனை ஏற்படுத்த நாம் முயற்சிக்க வேண்டும். எனவே மனித உரிமை ஆணைக்குழு உண்டு, போலீஸ் உண்டு, சட்டம் உண்டு, நீதி மன்றம் உண்டு என்று சிந்திக்க முடியாது. எமது மனநிலை மாற்றம் தேவை என்றார்.

பொது அமைப்புக்களின் பிரதி நிதிகள், நல்லிணக்கம், தொடர்பாடல், பொது சனத் தொடர்புத்துறை முதலாக துறைனளைச் சேர்ந்த பல உயர் அதிகாரிகளும் இதில் கலந்து கொண்டனர். 

1 comment:

  1. எல்லாம் உண்டு ஆனால் ஒன்றும்மில்லை. குற்றங்கள் முறையாக விசாரணைக்கு வந்து தண்டனைகள் நிறைவேற்றப்பட்டால் நிரந்தரத் தீர்வு நிச்சயம் உண்டு. ஆனால் தீர்வை எதிர்பார்ப்பவர்களே தண்டனையை எதிர்த்து நிண்டால் ? ஆகவே மக்கள் மத்தியில் மனப்பாங்கு மாற்றம் ஏற்பட குற்றங்களுக்கான தண்டனையும் கடுமையாக்கப்படுவதுடன் விரைவுபடுத்தப்பட வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.