Header Ads



முஸ்­லிம்­களுக்கான நஷ்­ட­ஈடு, இழுத்தடிக்கப்டுவதன் மர்மம் என்ன..?

செவிடன் காதில் ஊதிய சங்கான அம்பாறை பள்ளிவாசல் பிரச்சினை : தூக்கத்தில் அமைச்சர்கள் !!
“அம்­பா­றையில் நள்ளிரவில் காசிம் ஹோட்­டலில் கைவைத்த இன­வா­திகள் அம்­பாறை பள்­ளி­வா­சலை வெறி­கொண்டு தாக்­கி­ய­ழித்­தார்கள். புனித குர்­ஆனை எரித்து சாம்­ப­லாக்­கி­னார்கள்.அதன் மூலம் பல வெளிநாட்டு சக்திகளின் அஜந்தாவை அவர்கள் நிறைவேற்ற முடிவுக்கு வந்தார்கள் என்பது பின்னாளில் பல திடுக்கிடும் உண்மைகளாக வெளிவந்தன.
அம்­பாறை ஜும்ஆ பள்­ளி­வா­ச­லுக்கு ஏற்­ப­டுத்­தப்­பட்ட நஷ்­ட­ம் 4 ½ கோடி ரூபா­வென மதிப்­பீடு செய்து அறி­வித்­தி­ருக்­கிறேன். இந்த நஷ்­ட­ஈடு மதிப்­பீட்டுப் பணியில் அரச தொழில் நுட்ப அதி­கா­ரியும் கலந்­து­கொண்டார். பள்­ளி­வாசல் தாக்கி சிதைக்­கப்­பட்டு கடந்த 26 ஆம் திக­தி­யுடன் ஒரு வருடம் பூர்­தி­யா­கியும் ஒரு நஷ்ட ஈடும் வழங்­கப்­ப­ட­வில்லை” என்­கிறார் அம்­பாறை ஜும்ஆ பள்ளி தாக்­கு­த­லுக்­குட்­பட்ட கால­கட்­டத்தில் அதன் நிர்­வாக சபைத்­த­லை­வ­ராக இருந்த சகோதரர் ஏ.எல்.ஏ. ஹாரூன்.
அம்­பாறை ஜும்ஆ பள்­ளி­வா­ச­லுக்­கான நஷ்­ட­ஈட்டைப் பெற்றுக் கொள்­வ­தற்­காக எந்­த­வித அழுத்­தங்­க­ளையும் சம்­பந்­தப்­பட்­ட­வர்­க­ளுக்கு பிர­யோ­கிக்­காது தற்­போ­தைய நிர்­வா­க­சபை மௌனித்து இருப்­பது கவலை தரு­கி­றது. இதற்­கான முழுப்­பொ­றுப்­பையும் வக்­பு­ச­பையே பொறுப்­பேற்க வேண்டும் எனவும் அவர் தெரி­விக்­கிறார்.
2018 பெப்­ர­வரி மாதம் 26 ஆம் திகதி இரவு 9.30 மணி, அம்­பாறை ஜும்ஆ பள்­ளி­வா­ச­லி­லி­ருந்தும் 1 ½ கிலோ மீற்­றர்­க­ளுக்கு அப்பால் அமைந்­துள்ள காசிம் ஹோட்­ட­லி­லி­ருந்தே வன்­செயல் ஆரம்­பிக்­கப்­பட்­டது. காசிம் ஹோட்­டலில் கருத்­தடை வில்­லைகள் கலக்­கப்­பட்ட உண­வுகள் பரி­மா­றப்­ப­டு­கின்­றன. பெரும்­பான்மை இனத்தின் விருத்­தியை கட்­டுப்­ப­டுத்து­வ­தற்­கான சதி முயற்சி எனக்­குற்றம் சுமத்தி இன­வா­திகள் அன்­றை­ய­தினம் 9.30 மணி­ய­ளவில் ஹோட்­ட­லைத்­தாக்­கி­னார்கள், தீயிட்­டார்கள், பணி­யா­ளர்­க­ளையும், உரி­மை­யா­ள­ரையும் துரத்­தி­ய­டித்­தார்கள்.ஆனால் அவர்களின் அஜந்தா அதுமட்டுமில்லை என்பதே உண்மை
அங்­கி­ருந்து ஆரம்­பிக்­கப்­பட்ட வன்­செ­யல்கள் ஏனைய முஸ்­லிம்­களின் வர்த்­தக நிலை­யங்­க­ளுக்கும் பர­வின. அம்­பாறை ஜும்ஆ பள்­ளி­வா­ச­லையும் அவர்கள் வெறி­கொண்டு தாக்­கி­னார்கள். பள்­ளி­வாசல் தங்கும் அறை­களில் வெளி­யூர்­க­ளி­லி­ருந்து வியா­பார நோக்­க­மாக தங்­கி­யி­ருந்­த­வர்­களும், அவர்­க­ளது வாக­னங்­களும் தாக்­கப்­பட்­டன எரிக்­கப்­பட்­டன.

நிர்­வாக சபைக்குள் பிளவு
பள்­ளி­வாசல் தாக்­கு­தல்­க­ளுக்­குள்­ளாகி சுமார் ஐந்து மாதங்­களின் பின்பு வக்­பு­சபை பள்­ளி­வா­ச­லுக்­கென்று புதிய நிர்­வாக சபை­யொன்­றினைத் தெரிவு செய்­தது. 2018, ஜுலை 6 ஆம் திகதி கூட்­ட­மொன்று கூட்­டப்­பட்டு ஆகஸ்ட் மாதம் 1 ஆம் திகதி அதா­வது 24 நாட்­க­ளுக்குள் நிய­மனக் கடி­தங்கள் வழங்­கப்­பட்­டன. 30 நாட்­க­ளுக்குப் பின்பே நிய­மனக் கடி­தங்கள் வழங்­கப்­பட வேண்டும். வக்­பு­சபை இவ்­வி­ட­யத்தில் ஏன் அவ­ச­ரப்­பட்­டது எனத் தெரி­ய­வில்லை என்றார் அக்­கா­லத்தில் நிர்­வாக சபையின் தலை­வ­ராக செயற்­பட்ட ஏ.எல்.ஆர். ஹாரூன். ஆடறுக்க முன் புடுக்குக்கு சட்டி நீட்டிய கதையாகிப்போனது சிவப்பு வரலாறே.
இந்த 17 பேரைக் கொண்ட நிர்­வாக சபைக்குள் கருத்து முரண்­பா­டுகள் ஏற்­பட்டு நிர்­வாக சபை இரண்­டாகப் பிள­வு­பட்­டதி­னை­ய­டுத்து தற்­போது சில மாதங்­க­ளுக்கு முன்­பி­ருந்து வக்பு ட்ரிபு­யுனல் ஐ.ஏ. ஜப்பார் தலை­மையில் 5 பேர் கொண்ட ஒரு சபையை நிய­மித்­துள்­ளது.
தற்­போ­தைய நிர்­வாக சபையின் தலைவர் ஐ.ஏ. ஜப்­பாரைத் தொடர்­பு­கொண்டு வின­வி­ய­போது வக்பு சபை­யினால் நிய­மிக்­கப்­பட்ட 17 பேர் கொண்ட நிர்­வாக சபையில் நிலவும் கருத்து முரண்­பா­டு­க­ளையும், பிரச்­சி­னை­க­ளையும் தீர்ப்­ப­தற்கே நாம் நிய­மிக்­கப்­பட்­டுள்ளோம். பள்­ளி­வாசல் நஷ்­ட­ஈ­டுகள் தொடர்­பாக முன்­னைய நிர்­வாக சபை நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது. ஒரு மாத காலத்­தினுள் புதிய நிர்­வாக சபை­யொன்று நிய­மிக்­கப்­படும் என்றார்.
பள்­ளி­வா­ச­லுக்­கான நஷ்­ட­ஈடு எவ்­வ­ளவு? அப்போதைய காலகட்டத்தில் அந்த துறைக்கு அமைச்சராக இருந்த இப்போதைய பிராமருக்கு தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது.
அன்­றைய பள்­ளி­வாசல் நிர்­வாகம் பள்­ளி­வா­ச­லுக்­கான நஷ்­ட­ஈடு 4 ½ கோடி ரூபா என மதிப்­பீடு செய்து அம்­பாறை மாவட்ட செய­ல­கத்­துக்கு அறிக்கை சமர்ப்­பித்த நிலையில் அம்­பாறை ஜும்ஆ பள்­ளி­வா­ச­லுக்­கான நஷ்­ட­ஈடு 27 மில்­லியன் ரூபாய்­களே என மாவட்ட செய­லக அதி­கா­ரி­களும், மதிப்­பீட்டுத் திணைக்­க­ளமும் இணைந்து அறிக்கை தயா­ரித்­துள்­ளது. ஆனால் அரச நிறு­வ­னங்­களால் செய்­யப்­பட்ட மதிப்­பீ­டு­களைக் கூட நஷ்­ட­ஈ­டாக வழங்­கு­வ­தற்கு அமைச்­ச­ரவை அங்­கீ­காரம் வழங்­காமை கவ­லைக்­கு­ரி­ய­தாகும். எமது நாட்டின் அமைச்­ச­ர­வையில் மூன்று சிரேஷ்ட முஸ்லிம் அமைச்­சர்கள் பதவி வகிக்­கி­றார்கள். அவர்கள் தாம் முஸ்லிம் சமூ­கத்தைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­து­ப­வர்கள் என்று கூறிக்­கொள்­கி­றார்கள். ஆனால் அரச நிறு­வ­னங்­களால் அரச அதி­கா­ரி­களால் பள்­ளி­வா­ச­லுக்கு ஏற்­பட்ட நஷ்டம் 27 மில்­லியன் என மதிப்­பீடு செய்­யப்­பட்­டி­ருக்­கின்ற நிலையில் நஷ்­ட­ஈ­டாக ஒரு மில்­லியன் ரூபாவே வழங்­க­மு­டியும் எனத் தெரி­விப்­பது எந்த வகையில் நியா­ய­மா­னது? முஸ்லிம் அமைச்­சர்கள் இது தொடர்பில் அமைச்­ச­ர­வையில் வாதிட்டு உரிய நஷ்­ட­ஈட்­டினை பெற்­றுக்­கொ­டுக்க ஆவன செய்­தி­ருக்­க­வேண்டும்.
அம்­பா­றையில் சுமார் 80 முஸ்லிம் குடும்­பங்­களே வாழ்­கின்­றன. சிங்­க­ள­வர்­களே அங்கு பெரும்­பான்­மை­யாக வாழ்­கி­றார்கள். முஸ்­லிம்­க­ளுக்­கென்று இருக்கும் அடை­யா­ளத்தை இல்­லாமற் செய்­வதே பெரும்­பான்மை இனத்தின் இலக்­காக இருக்­கி­றது. அத­னா­லேயே பள்­ளி­வா­சலைத் தாக்கி சிதைத்­தி­ருக்­கி­றார்கள். அமைச்­ச­ர­வையைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் பெரும்­பான்­மை­யின அமைச்­சர்கள் பள்­ளி­வா­சல்­க­ளுக்கு உரிய நஷ்­ட­ஈட்­டினை வழங்­கு­வ­தற்குப் பின் நிற்­ப­தற்­கான காரணம் இது­வாக இருக்­கலாம்.
மத ஸ்தலங்­க­ளுக்கு நஷ்­ட­ஈ­டாக ஆகக்­கூ­டி­யது ஒரு மில்­லி­யனே வழங்­க­மு­டியும் என ஒரு சுற்று நிருபம் உள்­ள­தாக புனர்­வாழ்வு அதி­கார சபை தெரி­வித்­தி­ருப்­பது இங்கு குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.
சட்ட நட­வ­டிக்கை இல்லை
அம்­பா­றையில் இடம்­பெற்ற வன்­செ­யல்கள் தொடர்­பாக 450 பேருக்கும் மேற்­பட்­டோ­ரி­ட­மி­ருந்து பொலிஸார் வாக்கு மூலம் பெற்­றுள்­ளார்கள். ஆனால் எவ­ருக்­கெ­தி­ரா­கவும் சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வில்லை.
காசிம் ஹோட்டல் உண­வு­களில் கருத்­தடை மாத்­தி­ரைகள் கலக்­கப்­பட்­டுள்­ளன என்ற குற்­றச்­சாட்­டி­னை­ய­டுத்து அந்த ஹோட்­டலின் உணவு மாதி­ரிகள் அரச இர­சா­யன பகுப்­பாய்வுத் திணைக்­க­ளத்­துக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டன. இர­சா­யன பகுப்­பாய்வு அறிக்­கையில் அவ்­வா­றான கலப்­ப­டங்கள் எதுவும் இல்லை எனத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. எனவே பெரும்­பான்மை இனத்தின் திட்­ட­மிட்ட தாக்­கு­தல்­களே அம்­பாறை வன்­மு­றை­க­ளாகும்.

புனர்­வாழ்வு அதி­கா­ர­சபை
அம்­பா­றையில் இடம்­பெற்ற வன்­செ­யல்­க­ளினால் 13 சொத்­துகள் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அச்­சொத்­து­க­ளுக்­கான நஷ்­ட­ஈ­டாக 36 இலட்சம் ரூபா வழங்­கப்­பட வேண்­டி­யுள்­ள­தா­கவும் புனர்­வாழ்வு அதி­கா­ர­ச­பையின் மேல­திகப் பணிப்­பாளர் எஸ்.எம்.பதுர்தீன் தெரி­விக்­கிறார்.
அம்­பாறை ஜும்ஆ பள்­ளி­வா­ச­லுக்­கான நஷ்­ட­ஈடு 27 மில்­லியன் ரூபா என மதிப்­பீடு செய்­யப்­பட்­டி­ருந்­தாலும் நஷ்­ட­ஈ­டாக ஒரு மில்­லியன் ரூபா வழங்­கு­வ­தற்கே அமைச்­ச­ரவை அனு­மதி வழங்­கி­யுள்­ளது. மதஸ்­த­லங்­க­ளுக்கு நஷ்­ட­ஈ­டாக ஒரு மில்­லியன் ரூபா­வுக்கு மேல் வழங்­க­மு­டி­யா­தென புனர்­வாழ்வு அதி­கா­ர­சபை தெரி­விக்­கி­றது. அவ்­வா­றா­ன­தொரு சுற்று நிருபம் இருக்­கு­மானால் அதில் காலத்­துக்­குக்­கேற்ற திருத்­தங்­களைச் செய்­ய­வேண்டும். புனர்­வாழ்வு அதி­கார சபைக்குப் பொறுப்­பான அமைச்­ச­ராக தற்­போது பிர­தமர் ரணில் விக்கி­ர­ம­சிங்­கவே பதவி வகிக்­கிறார். எனவே முஸ்லிம் அமைச்­சர்கள் பிர­த­ம­ருடன் கலந்­து­ரை­யாடி புனர்­வாழ்வு அதி­கா­ர­ச­பையின் சுற்று நிரு­பத்தில் மாற்­றங்­களை செய்து பள்­ளி­வா­ச­லுக்கு உரிய நஷ்­ட­ஈட்­டினைப் பெற்­றுக்­கொ­டுக்க விரைந்து செயற்­ப­ட­வேண்டும். இல்­லையேல் அவர்கள் மறு­மையில் அல்­லாஹ்­விடம் இதற்­கான பதிலை வழங்­க­வேண்­டி­யேற்­படும்.
காசிம் ஹோட்­ட­லுக்­கான நஷ்­ட­ஈடு
அம்­பாறை காசிம் ஹோட்­ட­லுக்­கான நஷ்­ட­ஈடு 22 இலட்சம் ரூபா­வென மதிப்­பீடு செய்­யப்­பட்­டுள்­ள­தா­கவும் இத்­தொ­கையில் 10 வீதமே வழங்க முடியும் என சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரிகள் தெரி­வித்­தி­ருப்­ப­தா­கவும் அதன் உரி­மை­யாளர் ஏ.எல்.பரீத் தெரி­விக்­கிறார்.
காசிம் ஹோட்டல் கட்­ட­டத்தின் உரி­மை­யாளர் ஒரு பெரும்­பான்மை இனத்­த­வ­ராவார். ஹோட்­ட­லுக்கு முற்­ப­ண­மாக 7 இலட்சம் ரூபா கட்­டட உரி­மை­யா­ள­ருக்கு செலுத்­தப்­பட்­டி­ருக்­கி­றது என்­றாலும் அந்தப் பணத்தை திருப்பி வழங்­கு­வ­தற்கு மறுப்புத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அவர் கூறினார்.
அம்­பாறை ஜும்ஆ பள்­ளி­வாசல் இமாம் உட்­பட பணி­யா­ளர்­க­ளுக்கு தொட­ராக காசிம் ஹோட்­டலே இல­வ­ச­மாக உணவு வழங்­கி­யி­ருக்­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.
முஸ்­லிம்­க­ளுக்கு மறுப்பு
காசிம் ஹோட்டல் தாக்­கு­தல்­க­ளுக்கு உள்­ளா­னதன் பின்பு அந்த ஹோட்­டலை முஸ்­லிம்­க­ளுக்கு குத்­த­கைக்கு வழங்­கு­வ­தற்கு ஹோட்டல் கட்­ட­டத்தின் உரி­மை­யாளர் மறுப்புத் தெரி­வித்­துள்ளார். காசிம் ஹோட்டல் தற்­போது அதன் உரி­மை­யா­ள­ராக பெரும்­பான்மை இனத்­த­வ­ரி­னாலே நடத்­தப்­பட்டு வரு­கி­றது.
இதனால் தனது வாழ்­வா­தாரம் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் ஏ.எல்.பரீத் கவலை வெளி­யிட்­டுள்ளார். உரிய நஷ்­ட­ஈ­டுகள் விரை­வு­ப­டுத்­தப்­பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்­துள்ளார்.
ரஹீம் ஹோட்­ட­லுக்­கான நஷ்­ட­ஈடு
அம்­பாறை வன்­செ­யல்­க­ளின்­போது ரஹீம் ஹோட்­டலும் தாக்­கப்­பட்­ட­தா­கவும் நஷ்ட ஈட்­டினை எதிர்­பார்த்துக் காத்­தி­ருப்­ப­தா­கவும் அதன் உரி­மை­யாளர் ஐ.எம்.ஏ.ர-ஹீம் தெரி­விக்­கிறார். அவ­ரது 28 இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான வேனும் எரிக்­கப்­பட்­ட­தா­கவும் அவர் கூறு­கிறார். நஷ்­ட­ஈ­டு­களை துரி­தப்­ப­டுத்­து­மாறு அமைச்­சர்கள் ரிசாத் பதி­யுதீன், ரவூப்­ஹக்கீம் என்­போ­ருக்கு கடி­தங்கள் அனுப்­பியும் எது­வித பதிலும் இது­வரை கிடைக்­க­வில்லை எனவும் அவர் தெரி­விக்­கிறார்.
கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்­புல்லாஹ் சில வாரங்களுக்கு முன்பு தாக்குதல்களுக்குள்ளான பள்ளிவாசலை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். இது தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டுவருவதாகவும் உறுதியளித்துள்ளார். இவ்வாறான நகர்வுகள் அனைத்துத் தரப்பினராலும் முன்னெடுக்கப்பட வேண்டும்.
அம்பாறையில் முஸ்லிம்களின் எதிர்காலம்

அம்பாறையில் இடம்பெற்ற வன்முறைகள் திட்டமிடப்பட்ட செயலாகவே தெரிகிறது.
கொத்து ரொட்டியில் கருத்தடை மத்திரை கலக்கப்படுவதாக முன்னேடுக்கப்பட்ட பிரசாரம் பொய்யானது என்பதை விஞ்ஞான ரீதியான பரீசோதனைகள் ஊடாக சுகாதார அமைச்சே உறுதிப்படுத்தியுள்ளது. எனினும் இவ்வாறான பொய்க்கதைகளைக் கூறி அங்கு சிறுபான்மையினராக வாழும் முஸ்லிம்களை ஓரங்கட்டுவதே பெரும்பான்மை இனத்தின் இலக்காக இருக்கிறது.
முஸ்லிம்களின் அடையாளச் சின்னமான பள்ளிவாசல் வெறிகொண்டு தாக்கப்பட்டு சிதைக்கப்பட்டிருக்கிறது. முஸ்லிம்களின் வாழ்வாதாரங்கள் முடக்கப்பட்டுள்ளன. தொடர்ந்தும் அங்கு இன உறவுகள் வலுவடைந்துள்ளதாகத் தெரியவில்லை. எனவே முஸ்லிம் அரசியல் தலைவர்கள் அங்கு வன்செயல்களினால் பாதிக்கப்பட்ட சொத்துகளுக்கும், பள்ளிவாசலுக்கும் உரிய நஷ்டஈடுகளைப் பெற்றுக் கொடுத்து அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தவேண்டும்.
பள்ளிவாசல் பரிபாலனத்தை சீராக முன்னெடுப்பதற்கும், உரிய நஷ்டஈட்டினைப் பெற்றுக்கொள்வதற்கும் எற்ற வகையில் வக்புசபை செயற்திறன்மிக்க நிர்வாக சபையொன்றினை விரைவில் நியமிக்கவேண்டும்.
ஹிஸ்புல்லாஹ் ஆளுநராகவும் அதாவுல்லா அம்பாறையில் வசிப்பவராகவும் இருக்க ஹக்கீமின் சத்தம் அறவே இல்லாமல் போக றிசாத் அஸரை மட்டும் ஆறுதடவை தொழுததுதான் மிச்சம் ஆனால் முசிங்களுக்கு எதுவும் நடக்கவில்லை. நேற்றைய வரவு செலவிலும் அந்த பள்ளிக்கு எந்த ஒதுக்கீடுமில்லை என்பது கவலையே.

ஏ.ஜி.எம்.அர்சாத் 

3 comments:

  1. நஷ்டஈடு பெற்று லாபம் பார்ப்பதற்காக முஸ்லிம்களும் தங்கள் கடைகள் பள்ளிகளை உடைத்தார்கள் என அதிகாரிகள் ஆதாரங்கள் வைத்துள்ளார்களாமே, உண்மையா?

    ReplyDelete
  2. I reckon Governor Hizbullah is more capable and has authority to get forth the estimated compensation from government for Ampara Masjid. He must expedite it for Allah's sake.

    ReplyDelete
  3. I reckon Governor Hizbullah is more capable and has authority to get forth the estimated compensation from government for Ampara Masjid. He must expedite it for Allah's sake.

    ReplyDelete

Powered by Blogger.