Header Ads



வில்பத்துவில் முஸ்லிம்கள், எந்த அத்­து­மீ­றலும் செய்யவில்லை - விரிவுரையாளர் ஆதாரத்துடன் அறிவிப்பு

- Suhail -

முஸ்லிம் குடி­யேற்­றங்கள் வில்­பத்து வன எல்­லைக்கு வெளி­யி­லேயே இடம்­பெற்­றுள்­ளன. அத்­து­மீ­றிய குடி­யேற்­றங்கள் எதுவும் இடம்­பெ­ற­வில்லை என தெரி­வித்­துள்ள ஓய்­வு­பெற்ற புவி­யி­யற்­துறை சிரேஷ்ட விரி­வு­ரை­யா­ளரும், முன்னாள் மாகாண சபை தேர்தல் தொகுதி எல்லை நிர்­ணய ஆணைக்­கு­ழுவின் உறுப்­பி­ன­ரு­மான ஏ.எஸ்.எம்.நௌபல், கடந்த 30 வருட கால­மாக வில்­பத்து கிழக்கு மற்றும் தெற்கு பகு­தி­களில் பாரி­ய­ளவில் காட­ழிப்­புகள் இடம்­பெற்­றுள்­ளன. இது குறித்து சுற்­றா­டல்­துறை அமைச்­ச­ரான ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கண்­டு­கொள்­வ­தில்லை எனவும் குற்றம் சாட்­டி­யுள்ளார். அத்­துடன், காட­ழிப்­பு­களும் வன ஆக்­கி­ர­மிப்பும் மன்னார் மாவட்­டத்தில் இடம்­பெ­ற­வில்லை. வில்­பத்து வனப்­ப­கு­தியின் கிழக்கு, தெற்கு எல்­லைக்­குட்­பட்ட அனு­ரா­த­புரம் மற்றும் புத்­தளம் மாவட்ட பகு­தி­க­ளி­லேயே பாரி­ய­ளவில் இடம்­பெற்­றுள்­ளன  என்றும் அவர் மேலும் தெரி­வித்தார்.

வில்­பத்து வன பகு­தியில் காட­ழிப்பு இடம்­பெ­று­வ­தாக ஊட­கங்­க­ளிலும் சமூக வலைத்­த­ளங்­க­ளிலும் திட்­ட­மிட்ட இன­வாத ரீதி­யி­லான பிர­சா­ரங்கள் முன்­னெ­டுத்து வரும் நிலை­யி­லேயே அவர் இவ்­வாறு விடி­வெள்­ளிக்கு தெரி­வித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரி­விக்­கையில்,  கடந்த 30 வருட கால­மாக வில்­பத்து வனப்­ப­கு­தியில் பாரி­ய­ளவில் காட­ழிப்­புகள் இடம்­பெற்­றுள்­ளன. குறிப்­பாக வில்­பத்து சர­ணா­ல­யத்தின் கிழக்கு எல்லை பகு­தி­யான அனு­ரா­த­புர மாவட்­டத்தில் கூடு­த­லாக காட­ழிப்பு நடந்­தே­றி­யுள்­ளது.

வில்­பத்து வனப்­ப­குதி எல்­லை­யி­லுள்ள தன்­சிறி மலை­யி­னூ­டாக ஊட­றுத்து பிர­தான வனப்­ப­கு­திக்குள் பாரிய அத்­து­மீ­றல்­களும் காட­ழிப்­புகளும் இடம்­பெற்­றுள்­ளன.

அத்­துடன், மோத­ரகம் வெவ எனப்­படும் இடத்­திலும் மோத­ரகம் ஆற்றுப் பகு­தி­யிலும் காட­ழிப்பு நடந்­துள்­ளது. இது வில்­பத்து சர­ணா­ல­யத்­திற்­கான பிர­தான முக்­கியம் வாய்ந்த வடிகால் பகு­தி­களில் ஒன்­றாகும். இப்­ப­கு­தியில் முழு­மை­யாக காட­ழிப்பு செய்­யப்­பட்டு சேனைப் பயிர்­செய்கை உள்­ளிட்ட விவ­சாய நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன.

இவ்­வாறு, கிழக்கு எல்­லைப்­ப­கு­தியில் முழு­மை­யாக ஊடு­நு­வப்­பட்­டுள்­ளது. எல்லைப் பகு­தி­க­ளையும் தாண்டி வனப்­ப­கு­தி­க­ளுக்­குள்ளும் ஆக்­கி­ர­மிப்­புகள் இடம்­பெற்­றுள்­ளன. வன விலங்­கு­களும் அழிக்­கப்­ப­டு­கின்­றன. அதற்கு ஆத­ார­மாக அநு­ரா­தபுர மாவட்­டத்­தி­லுள்ள வில்­பத்து வன எல்­லைப்­ப­கு­தி­களில் வன­வி­லங்கு இறைச்சி விற்கும் இடங்கள் அதி­க­ரித்­துள்­ளன.

இது­த­விர புத்­தளம் மாவட்ட எல்­லைக்குள் உள்ள வில்­பத்­துவின் தெற்கு பகு­தி­யிலும் காட­ழிப்­புகள் பாரி­ய­ளவில் இடம்­பெற்­றுள்­ளன. பொது­வாக வனப்­ப­கு­தி­யி­லி­ருந்து 1 கிலோ மீற்றர் தொலைவு வரை வன எல்­லை­க­ளாக கணிக்­கப்­படும். ஆனாலும், இங்கு வன­பா­து­காப்பு எல்­லைகள் முழு­மை­யாக ஆக்­கி­ர­மிக்­கப்­பட்­டுள்­ளன. இவற்­றிற்கு, ஜய­பூமி, சுவர்­ண­பூமி என்ற பெயர்­களில் பத்­தி­ரங்­களும் அர­சாங்­கத்தால் வழங்­கப்­பட்­டுள்­ளன. அரச ஆத­ர­வு­டனே அங்கு காட­ழிப்­புகள் இடம்­பெற்­றி­ருக்­கி­றதா என்று சந்­தே­­கங்கள் எழு­கின்­றன. சில பகு­தி­களில் மரம் வெட்­டு­வ­தற்­காக பிர­தேச செய­லா­ளர்­க­ளினால் அனு­ம­தியும் வழங்­கப்­பட்­டுள்­ளது. ஏனென்றால், அவை சிங்­கள கிரா­மங்­க­ளா­கவே இருக்­கின்­றன. அங்கு சிங்­கள அதி­கா­ரி­களே இருக்­கின்­றனர். இதனால், இந்த விடயம் பிரச்­சி­னை­யாக்­கப்­ப­ட­வில்லை.

தப்­போவ என்ற வன­வி­லங்கு சரணா­லயப் பகு­தியில் பாரி­ய­ளவில் காடுகள் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்­டுள்­ளன. அது முஸ்லிம் அல்­லா­த­வர்­க­ளினால் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்­டுள்­ள­மையால் பூதா­க­ர­மாக்­கப்­ப­டு­வ­தில்லை. இவ்­வா­றான காட­ழிப்­புகள், ஆக்­கி­ர­மிப்­புகள் மற்றும் அத்­து­மீ­றல்கள் குறித்து ஜனா­தி­பதி அறி­யா­ம­லி­ருக்க வாய்ப்­பில்லை. சுற்­றாடல் துறை அமைச்சை பொறுப்­பேற்­றி­ருக்கும் அவர் இவ்­வி­ட­யத்தை கண்­டு­கொள்­ளா­தி­ருப்­பது ஆச்­ச­ரி­ய­ம­ளிக்­கி­றது. மன்னார் மாவட்டம் வில்­பத்து எல்­லைக்குள் உட்­ப­டாது. ஆனாலும், அப்­ப­கு­தி­யி­லி­ருந்து மக்கள் வெளி­யேற்­றத்தின் பின்னர் புதி­தாக காடுகள் உரு­வா­கி­யி­ருக்­கின்­றன. எனினும் அது மக்கள் வாழ்ந்த பூர்­வீக பகு­தி­க­ளாகும்.

மறிச்­சிக்­கட்டி,  கொண்­டச்சி, கர­டிக்­குளம் உள்­ளிட்ட பகு­திகள் வில்­பத்து வன பாது­காப்பு எல்­லை­யி­லி­ருந்து 10 மைல் தொலை­வி­லேயே இருக்­கின்­றன. இவை எந்­த­வ­கை­யிலும் வில்­பத்து சர­ணா­ல­யத்­திற்கு உட்­ப­டாது. அந்தப் பகு­தியில் 30 வருடத்திற்கு முன்னர் முஸ்லிம்கள் வாழ்ந்ததற்கான அத்தாட்சிகள் இருக்கின்றன. எனினும்  இன்னும் அவை மக்களுக்கு புனரமைத்து கையளிக்கப்படவில்லை.

சிலாவத்துறை – புத்தளம்  பிரதான வீதியில் மீள்குடியேற்றப்பட்டிருப்பது முஸ்லிம் குடியேற்றங்கள் மட்டுமல்ல, இரு தமிழ் கிராமங்களும் 80 வீடுகள் கொண்ட சிங்கள குடியிருப்பும் அமைக்கப்பட்டுள்ளது. இதை யாரும் கண்டுகொள்வதாக தெரிவதில்லை.

எனவே, இனவாதரீதியில் திட்டமிட்டே இன்று பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அத்துடன் அரசியல் நோக்கங்களும் இருக்கின்றன என்றும் அவர் தெரிவித்தார்.

1 comment:

Powered by Blogger.