Header Ads



‘ தனது உயிருக்கு அச்சுறுத்தல் ‘

பாதாளக் குழுக்களுடன்  தனக்குத் தொடர்பு இருப்பதாக, சமூக வலைத்தளங்களில் பரவும் போலி செய்திகளால், தனது உயிருக்கு அச்சறுத்தல் ஏற்பட்டுள்ளதென, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவில் முறைபாடு ஒன்றை செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த விடயம் குறித்து, எதிர்வரும் நாள்களில் நாடாளுமன்றத்தில் விசேட உரையொன்று ஆற்றவுள்ளதாகவும் முஜிபுர் ரஹ்மான் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.