துப்பாக்கி வாங்குவதற்காக, பயங்கரவாதி சொன்ன காரணம்
நியூசிலாந்து மசூதியில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் என்ன சொல்லி, எப்படி துப்பாக்கி வைத்து கொள்வதற்கு உரிமம் வாங்கினான் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
நியூசிலாந்தின் Christchurch பகுதியில் இருக்கும் இரண்டு மசூதிகளில் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த Brenton Tarrant என்ற நபர் நடத்திய சரமாரி துப்பாக்கிச் சூடு காரணமாக 50 பேர் பலியாகினர்.
இந்த சம்பவம் காரணமாக இன்னும் நியூசிலாந்து மக்கள் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை என்று அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் இப்படி பலரையும் கொல்லும் அளவிற்கு துப்பாக்கி வாங்கியதற்கு அவன் என்ன சொல்லி வாங்கினான், அவனுக்கு எப்படி இந்த துப்பாக்கிகளுக்கு உரிமம் கிடைத்தது என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
நியூசிலாந்தில் துப்பாக்கி வைத்து கொள்ள வேண்டும் என்றால், அதற்கு முறைபடி உரிமம் பெற வேண்டும். அதன் படி 2017-ஆம் ஆண்டு Brenton Tarrant துப்பாக்கி வைத்து கொள்வதற்கு உரிமம் வாங்கியுள்ளான்.
இவன் 2017-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தனக்கு துப்பாக்கி வேண்டும் என்று விண்ணப்பித்துள்ளான். அதன் படி அதிகாரிகள் அந்த மாதம் அவனுடைய வீட்டிற்கு ஏன் எதற்காக துப்பாக்கி வேண்டும் என்று விண்ணப்பித்துள்ளீர்கள் என்று கேட்டுள்ளனர்.
அப்போது அவன், தன்னுடைய பாதுகாப்பிற்காக விண்ணப்பித்துள்ளேன் என்று கூறியுள்ளான். அதன் பின் அதிகாரிகள் அடுத்தடுத்த வழி முறைகளை பின் பற்றி 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் துப்பாக்கி பயன்படுத்துவதற்கான உரிமம் கொடுத்துள்ளனர்.
அதன் பின் அவன் அதே ஆண்டு டிசம்பர் மாதம் இரண்டு semi-automatic துப்பாக்கிகள் வாங்கியுள்ளான் என்பது தெரியவந்துள்ளது.
When he submitted the application. When the committee approved the application. Please consider the period.
ReplyDeleteGreat post and success for you..
ReplyDeleteKontraktor Pameran
Jasa Pembuatan Booth Pameran
Kontraktor Booth Pameran
Jasa Pembuatan Booth
Jasa Dekorasi Booth Pameran