Header Ads



ஓமான் அமைச்சர் இலங்கையில் - கோடிகளை கொட்டுவாரா...?

ஓமானிய எரிபொருள்துறை அமைச்சர் நேற்று இரவு இலங்கையை வந்தடைந்துள்ளதாக சர்வதேச செய்தி சேவையொன்று தெரிவித்துள்ளது.

இந்திய நிறுவனம் ஒன்றுடன் 3.85 பில்லியன் டொலர் ஒதுக்கீட்டு எண்ணெய் சுத்திகரிப்பு நிர்மாண திட்டத்தில் முதலீடு செய்யவில்லை என்று ஓமானிய அதிகாரிகள் கூறி இரண்டு நாட்களில் இந்த பயணம் இடம்பெற்றுள்ளது.

மொஹமட் பின் ஹமாட் அல் ருஹ்மி இலங்கைக்கு வந்துள்ள போதும் அவர் குறித்த நிர்மாண திட்ட உடன்படிக்கையில் கையெழுத்திடுவாரா? என்பது தெரியவரவில்லை.

எனினும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் ஆரம்ப நிகழ்விற்காகவே ஓமானிய அமைச்சர் வருகை தந்துள்ளதாக இலங்கையின் அரசாங்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.