Header Ads



"கோத்தபாயவும், கரு ஜயசூரியவும் ஜனாதிபதி வேட்பாளர்கள்"


கோத்தபாயவே அடுத்த ஜனாதிபதி வேட்பாளராகவுள்ளதாக அமைச்சர் நவீன் திஸாநாயக்க நிகழ்வு ஒன்றில் வைத்து கூறிய பின், அந்த நிகழ்வில் பங்கேற்ற கோத்தபாய, நவீன் திஸாநாயக்கவின் மாமனாரான கரு ஜயசூரியவும் ஜனாதிபதி வேட்பாளராக போகிறார் என்று குறிப்பிட்டுள்ளார்.

நாரஹன்பிட்டிய ஸ்ரீகௌதம விஹாரையில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது இருவரும் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது உரையாற்றிய நவீன் திஸாநாயக்க, தனித்து சிங்கள பௌத்த வாக்குகளால் அரசாங்கத்தை அமைக்க முடியும்.

அல்லது அரசாங்கத்தை கவிழ்க்க முடியும் என்ற அடிப்படையில் ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாய போட்டியிடுவார் என குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து உரையாற்றிய கோத்தபாய, “உங்களுடைய தந்தையாரான காமினி திஸாநாயக்க எதனை செய்ய முடியவில்லையோ அதனை நீங்கள் செய்வீர்கள் என்று நம்புகிறேன்.

எனினும் உங்கள் மாமனார் கரு ஜயசூரிய ஜனாதிபதி வேட்பாளராக வருவார் என்பதும் எனக்கு தெரியும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

Powered by Blogger.