Header Ads



ஜனா­தி­பதி தேர்­தலில் அமோக, வெற்­றி­யீட்­டக்­கூ­டிய வேட்­பா­ள­ருடன் கள­மி­றங்­க­வுள்ளோம் -

ஐக்­கிய தேசிய முன்­னணி ஜனா­தி­பதி மைத்­திரிபால சிறி­சே­னா­வையும் சேர்த்­துக்­கொண்டு அமைத்­தி­ருந்த அர­சாங்கம் கசப்­பான அனு­ப­வங்­க­ளையே பெற்­றுத்­தந்­துள்­ளது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலை­வரும், நகர திட்­ட­மிடல்,நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம் தெரி­வித்தார்.

மாத்­தளை மாவட்­டத்தில், கலே­வ­லயில் நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்ள   நீர் வழங்கல் வடிகால் அமைப்பு சபையின் புதிய அலு­வ­லக கட்­ட­டத்தின் திறப்­பு­விழா ஞாயிற்­றுக்­கி­ழமை இடம்­பெற்ற போது பிர­தம அதி­தி­யாக கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு கூறினார்.

அமைச்சர் ஹக்கீம் அங்கு  உரை­யாற்­று­கையில் மேலும்  கூறி­ய­தா­வது

முன்னாள் ஜனா­தி­பதி, தற்­போ­தைய ஜனா­தி­ப­தி­யுடன் இணைந்து செய்த சூழ்ச்­சியும்,சதியும் இந்த நாட்டின் பொரு­ளா­தா­ரத்தில் வீழ்ச்­சியை மட்­டு­மல்ல சர்­வ­தேச மட்­டத்தில் இந்த நாட்­டுக்கு இருந்த கீர்த்­தியை இல்­லா­ம­லாக்கி பாரிய கலங்­கத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. அத்­துடன் வெளி­நாட்டு உத­வி­களை பெறும் வாய்ப்­பையும் வெகு­வாக குறைத்து விட்­டது. பெரிய அளவில் முன்­னெ­டுக்­கப்­படும் அபி­வி­ருத்தி செயல் திட்­டங்­களும் இதனால் பாதிக்­கப்­பட்­டுள்­ளன. இது இந்த நாட்­டுக்கு இழைக்­கப்­பட்ட மிகப்­பெ­ரிய துரோ­க­மாகும்.

ஐக்­கிய தேசிய கட்சி சிறு­பான்மை கட்­சி­க­ளோடு இணைந்து இப்­போது அர­சாங்­கத்தை கொண்டு செல்­கி­றது. ஏனைய கட்­சி­க­ளுக்கு அவர்கள் விரும்­பி­னாலும் விரும்பா விட்­டாலும் எங்­க­ளுக்கு ஒத்­து­ழைப்­பதை தவிர வேறு­வ­ழி­யில்லை. வரவு செலவு திட்ட வாக்­கெ­டுப்பில் சுமார் 27 பேர் வாக்­க­ளிக்­கா­ம­லேயே  நழு­விச்­சென்று விட்­டதும் இதனை உறு­திப்­ப­டுத்­து­கி­றது. அத்­துடன் இப்­பொ­ழுது எதிர் கட்­சி­யி­ன­ருக்­குள்ளும் ஒற்­றுமை இல்­லாமல் போய்­விட்­டது. இதனை வைத்­துக்­கொண்டு மகிந்த ராஜ­பக்க்ஷ இப்­பொ­ழுது அர­சாங்­கத்தை தோற்­க­டித்­தி­ருக்­க­லாமே என்று கூறித்­தி­ரி­கின்றார்.அவ்­வாறு எங்­களை தோற்­க­டித்­து­விட முடி­யாது. தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு எங்­க­ளோடு இருப்­ப­துடன் பாரா­ளு­மன்­றத்தில் பெரும்­பான்­மையும் இருக்­கி­றது.

ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சி­யின­ருக்கு, மொட்டு கட்­சி­யி­ன­ரோடு கூட்­டுச்­சேர விருப்­ப­மில்­லா­தது போலவே தோன்­று­கின்­றது. தொடர்ந்தும் அவர்­க­ளுக்­கி­டையில் பேச்­சு­வார்த்­தைகள் இடம்­பெ­று­கின்­ற­னவாம்.என்­ன­வாக இருந்­தாலும் எதிர்­வரும் ஜனா­தி­பதி தேர்­தலில் அமோக வெற்­றி­யீட்­டக்­கூ­டிய வேட்­பா­ள­ருடன் கள­மி­றங்­க­வுள்ளோம்.இதை சகித்­துக்­கொள்ள முடி­யாமல் தங்­க­ளது உட்­பூ­சல்­களை தீர்த்­துக்­கொள்ள வழி­யின்றி அவர்கள் திண்­டா­டிக்­கொண்­டி­ருக்­கின்­றனர்என்றார்.

No comments

Powered by Blogger.