Header Ads



சம்பிக்க + வஜிர அமைச்சு நிதி, ஒதுக்கீடு தோல்யியடைந்ததை பிரச்சினையாக்க வேண்டாம் - ரணில்

அமைச்சர்களான பாட்டலி சம்பிக்க ரணவக்க மற்றும் வஜிர அபேவர்தன ஆகியோரின் அமைச்சுகளுக்கான செலவு தலைப்புகள் மீதான நிதி செலவீன ஒதுக்கீடு, சபையில் தோல்வியடையக் காரணம், வாக்கெடுப்பின் போது அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் உறுப்பினர்கள் சபையில் இல்லாதிருந்தமையே என தெரிவித்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நேற்று இடம்பெற்ற தவறை தாம் ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், குறித்த அமைச்சுகளுக்காக ஒதுக்கீடுகள், திருத்தங்களுடன் மீண்டும் நாடாளுமன்றத்தில் சமர்பித்து நிறைவேற்றிக்கொள்ள நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும், இதனை பிரச்சினையாக கருத வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.