Header Ads



சவுதியிலிருந்து இலங்கைவந்தபோது மதுஷ் கொள்ளையடித்த 500 கோடி இரத்தினக்கல் அரசுடைமையாகிறது

மாகந்துரே மதூஷின் வழிகாட்டலில் இயங்கும் பாதாள உலக குழுவிடமிருந்து கைப்பற்றிய 500 கோடி ரூபா பெறுமதியான மாணிக்கக் கல்லை அரசுடைமையாக்குவதற்கான சாத்தியப்பாடுகள் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த மாணிக்கக்கல் சுங்க சட்ட திட்டங்களை மீறி சட்டவிரோதமான முறையில் சவுதி அரேபியாவிலிருந்து நாட்டுக்கு எடுத்துவரப்பட்டது என பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இந்த மாணிக்கக் கல்லின் உரிமையை நிரூபிக்கக் கூடிய எந்தவொரு ஆவணமும் அதன் உரிமையாளரிடம் காணப்படாதுள்ளதாகவும் பொலிஸார் மேலும் கூறியுள்ளனர்.  

No comments

Powered by Blogger.