Header Ads



5 நாடுகளில் மறைந்திருக்கும் 50 பாதாள உலக உறுப்பினர்கள்

இலங்கையில் இடம்பெற்ற பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய  பாதாள உலக குழுக்களின் உறுப்பினர்கள் 50 பேர் வரை 5 நாடுகளில் மறைந்துள்ளமை  உளவுப் பிர்வினரால் கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியா, ஐக்கிய அமீரகம், இங்கிலாந்து, ஜப்பான் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் இவர்கள் மறைந்துள்ளமையை  உளவுப் பிரிவினரும், பாதாள உலக ஒழிப்பு சிறப்பு பொலிஸ் படையினரின் உளவு நடவடிக்கை மூலம் தெரியவந்துள்ளது.

இந் நிலையில் அவர்களை மீள இலங்கைக்கு அழைத்து வரவும் இங்கு வைத்து அவர்களுக்கு எதிரான நீதிம்னற நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் விஷேட செயற்றிட்டம் ஒன்றினை வகுப்பது தொடர்பில் பொலிஸ் தலைமையகத்தின் அவதானம்  திரும்பியுள்ளது.

(எம்.எப்.எம்.பஸீர்)

1 comment:

Powered by Blogger.