Header Ads



செரண்டிப் ஏயார்வைஸ் 2 ஆவது, உள்நாட்டு விமான சேவை ஆரம்பம் (படங்கள்)

மட்டக்களப்பு வவுனதீவு  விமான நிலையத்தில் செரண்டிப் ஏயார்வைஸ் நிறுவனம் தனது இரண்டாவது உள்நாட்டு பயணிகள் விமான சேவையை ஆரம்பித்தது.

இவ்விமான சேவை கொழும்பு - மட்டக்களப்பு ஆகிய இடங்களுக்கு சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது.

இதன் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று -02-  இடம் பெற்றது.

இதில் கிழக்கு ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புழ்ழாஹ் இந்த விமானசேவையை அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.

இந் நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி , மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர்கள், செரன்டிப் ஏயார்வைஸ் நிறுவன தலைவர் உட்பட பலரும் கலந்து கொண்டார்கள்.

இந்த விமான சேவை திங்கள் ,புதன்,வெள்ளி ஆகிய தினங்களில் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது.



No comments

Powered by Blogger.