ரணிலுக்கு கிடைத்த 2 பெறுமதியான பிறந்தநாள் பரிசுகள்
தனக்கு கிடைத்த பெறுமதியான பிறந்தநாள் பரிசுகள் தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டை, மிரிஜ்வல பகுதியில் பாரியளவிலான எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் சீமெந்து உற்பத்தி நிலையம் என்பவற்றுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
எனக்கு பிறந்த தின பரிசாக கிடைத்துள்ள எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் சீமெந்து தயாரிப்பு நிலையம் என்பன பெறுமதியான பரிசுகள்.
2015ஆம் ஆண்டில் நாம் ஹம்பாந்தோட்டை வந்தபோது கப்பல்கள் இல்லாத துறைமுகமும், விமானங்களே இல்லாத விமான நிலையமும், யானைகள் நடமாடும் வீதிகளையுமே காண முடிந்தது.
ஆனால் தற்போது ஹம்பாந்தோட்டை துறைமுகம் தனது செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளது.
அதன் முன்பாக எல்.என்.ஜீ மின் உற்பத்தி நிலையமொன்றை நிர்மாணிக்கப்பட்டு வருகிறது.
அதேபோல் இரண்டாவது எரிபொருள் சுத்திகரிப்பு நிலையமொன்றை அமைக்க முடியாமல் 51 வருடங்கள் இருந்த நிலைமையை தற்போதைய அரசாங்கம் மாற்றியமைத்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment