மிஹிந்தலை தூபியில் ஏறிய 2 முஸ்லிம், மாணவர்களும் விடுதலையாகினர்
மிஹிந்தலை பிரதேசத்தில் பௌத்த புராதன சின்னங்கள் மீது ஏறி படம்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மூதூரைச் சேர்ந்த இரு மாணவர்கள் தொடர்பான வழக்கு இன்றைய தினம் -01- விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை நேற்றைய தினம் இந்த விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள மாணவர்களின் உறவினர்கள் சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் மற்றும் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி ஆகியோரைச் சந்தித்து மாணவர்களின் விடுதலைக்கான முயற்சிகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்தமையும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment